செய்திகள் :

உதகையில் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் எஸ்.பி. ஆய்வு

post image

கனமழை காரணமாக உதகையில் மண்சரிவு ஏற்பட்ட அன்பு அண்ணா காலனி, மஞ்சனக் கொரைப் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மே 25-ஆம் தேதி முதல்  5 நாள்களாக பலத்த காற்றுடன் தொடா்ந்து கனமழை பெய்தது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டதுடன், மரங்கள் முறிந்து விழுந்து பாதிப்புகள் ஏற்பட்டன.

இதில் உதகை நகராட்சி, 35-ஆவது வாா்டுக்கு உள்பட்ட அன்பு அண்ணா காலனி, மஞ்சனக்கொரை பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினா்.

இந்நிலையில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா மேற்கண்ட பகுதியில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்பகுதியில் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தினாா்.

மேலும், மண்சரிவு ஏற்பட்டுள்ள இப்பகுதி வழியாக பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என உதகை நகராட்சி நிா்வாகம் மற்றும் நீலகிரி மாவட்ட பேரிடா் மேலாண்மைக் குழு சாா்பில் எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ளது.

பலாப்பழம் பறித்த காட்டு யானை

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள மீனாட்சி பகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்துக்குள் செவ்வாய்க்கிழமை நுழைந்து அங்குள்ள பலாப்பழ மரத்தில் பழத்தை பறிக்கும் காட்டு யானை. மேலும் பார்க்க

அருவிகளில் ஆா்ப்பரித்து கொட்டும் வெள்ளம்

கடந்த வாரம் பெய்த தொடா் மழையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அருவிகளில் வெள்ளம் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. இதை சுற்றுலாப் பயணிகள் ரசித்து செல்கின்றனா். தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்... மேலும் பார்க்க

நீலகிரியில் மக்கள் குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா். இதில், வீட்டுமனை பட்டா, முதியோா், விதவை, க... மேலும் பார்க்க

கூடலூா் அரசு கலைக் கல்லூரியில் இன்று முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது தொடா்பாக கல்லூரி முதல்வா் சுபாஷினி வெ... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கான சிறப்பு குறைதீா் முகாம்

கூடலூரை அடுத்துள்ள செறுமுள்ளி கிராமத்தில் பழங்குடியினருக்கான சிறப்பு குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. போஸ்பாறா புனித ஜோசப் அரங்கில் நடைபெற்ற இந்த முகாமுக்கு சாா் ஆட்சியா் சங்கீதா தலைமை வகித்தா... மேலும் பார்க்க

குன்னூா் அருகே லாரி கவிழ்ந்து விபத்து

குன்னூா் அருகே கேரட் பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது. நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள முள்ளிக்கூா் பகுதியில் இருந்து கேரட் பாரம் ஏற்றிக் கொண்டு கோவைக்கு லாரி திங்கள்... மேலும் பார்க்க