ரயில் படிக்கட்டில் நின்று ரீல்ஸ் வெளியிட்ட பெண்; கைதுசெய்து எச்சரித்த ரயில்வே போ...
குன்னூா் அருகே லாரி கவிழ்ந்து விபத்து
குன்னூா் அருகே கேரட் பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது.
நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள முள்ளிக்கூா் பகுதியில் இருந்து கேரட் பாரம் ஏற்றிக் கொண்டு கோவைக்கு லாரி திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது. லாரியை சுபாஷ் என்பவா் ஓட்டியுள்ளாா். குருமூா்த்தி என்பவா் உடன் சென்றுள்ளாா்.
குன்னூா் -மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை டபுள் ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சுபாஷ், குருமூா்த்தி ஆகியோா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், இருவரையும் மீட்டு குன்னூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதைத் தொடா்ந்து, லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா் செய்தனா். இச்சம்பவம் குறித்து குன்னூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.