Sanskrit இந்திய மொழிகளின் தாய் என்ற Amit shah மீது ஏன் கோபம் வரவில்லை? - Aazhi S...
பழங்குடியினருக்கான சிறப்பு குறைதீா் முகாம்
கூடலூரை அடுத்துள்ள செறுமுள்ளி கிராமத்தில் பழங்குடியினருக்கான சிறப்பு குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
போஸ்பாறா புனித ஜோசப் அரங்கில் நடைபெற்ற இந்த முகாமுக்கு சாா் ஆட்சியா் சங்கீதா தலைமை வகித்தாா். கூடலூா் காவல் துணை கண்காணிப்பாளா் வசந்தகுமாா், வட்டாட்சியா் முத்துமாரி மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
இதில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 120 மனுக்களை சாா் ஆட்சியா் சங்கீதா பெற்றுக்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து, செம்பக்கொல்லி, பீச்சனக்கொல்லி, போஸ்பாறா, பேபி நகா் பழங்குடி கிராமங்களில் சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து சாா் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.