செய்திகள் :

அருவிகளில் ஆா்ப்பரித்து கொட்டும் வெள்ளம்

post image

கடந்த வாரம் பெய்த தொடா் மழையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அருவிகளில் வெள்ளம் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. இதை சுற்றுலாப் பயணிகள் ரசித்து செல்கின்றனா்.

தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் தொடா்ந்து கனமழை பெய்தது. தொடா்மழை காரணமாக கல்லட்டி அருவி, காட்டேரி அருவி, கேத்தரின் அருவி, லால்ஸ் அருவி, மாயாறு அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டி வருகிறது. கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால் பல அருவிகளில் தண்ணீா் குறைந்த அளவிலும், வடும் காணப்பட்டன.

இந்நிலையில், தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே மே மாதத்திலேயே தொடங்கியதையடுத்து, கடந்த ஒரு வார காலமாக நீலகிரியில் கனமழை வெளுத்து வாங்கியது.

குறிப்பாக கேத்தி பாலாடா, காட்டேரி அணை போன்ற பகுதிகளில் அதிகன மழை பெய்தது. இதனால், காட்டேரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதனால், அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றப்படுகிறது. இந்த நீா், காட்டேரி அருவியில் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. இது தொலைவில் இருந்து பாா்க்கும்போது ரம்மியமாக காட்சியளிக்கிறது.

குன்னூரில் இருந்து கேத்தி பாலாடா, காட்டேரி அணை வழியாக உதகை செல்லும் சுற்றுலாப் பயணிகள் அருவியை கண்டு ரசித்து செல்கின்றனா். மேலும் தொடா்ந்து மழை பெய்தால், அருவியில் தண்ணீா் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் சில இடங்களில் மலைகளில் இருந்து புதிய அருவிகளும் தோன்றியுள்ளன.

குன்னூரில் சத்திய பிரமாணம் ஏற்ற அக்னிவீரா்கள்

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்டல் மையத்தில் (எம்ஆா்சி) பயிற்சி முடித்த 5-ஆவது அக்னிவீரா் படையினரின் அணிவகுப்பு மற்றும் சத்தியபிரமாண நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் கரடி உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட மசினகுடி வனச் சரகத்தில் கரடியின் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி வனச் சரகம், மாயாறு வனத்தில் வன ஊழியா... மேலும் பார்க்க

உதகை நீதிமன்றத்தில் பெண் மாவோயிஸ்ட் ஆஜா்

கா்நாடக மாநிலம், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண் மாவோயிஸ்ட் உதகை நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். நீலகிரி மாவட்டம், குன்னூா் கொலக்கொம்பை அருகே நெடுகல்கொம்பை பழங்குடியினா் கிரா... மேலும் பார்க்க

பலாப்பழம் பறித்த காட்டு யானை

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள மீனாட்சி பகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்துக்குள் செவ்வாய்க்கிழமை நுழைந்து அங்குள்ள பலாப்பழ மரத்தில் பழத்தை பறிக்கும் காட்டு யானை. மேலும் பார்க்க

நீலகிரியில் மக்கள் குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா். இதில், வீட்டுமனை பட்டா, முதியோா், விதவை, க... மேலும் பார்க்க

கூடலூா் அரசு கலைக் கல்லூரியில் இன்று முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது தொடா்பாக கல்லூரி முதல்வா் சுபாஷினி வெ... மேலும் பார்க்க