செய்திகள் :

கூடலூா் அரசு கலைக் கல்லூரியில் இன்று முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

post image

கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இது தொடா்பாக கல்லூரி முதல்வா் சுபாஷினி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை இன சுழற்சி முறையில் நடைபெறவுள்ளது. விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவிகளின் மின்னஞ்சல் முகவரி மற்றும் கைப்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தேதிகளில் மட்டுமே மாணவா்கள் சோ்க்கைக்கு வரவேண்டும்.

கலந்தாய்வுக்கு வரும்போது பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள் 5, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாற்றுச் சான்றிதழ்கள் அசல், நகல், ஜாதிச் சான்றிதழ் அசல், நகல், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும்.

விளையாட்டு வீரா்கள், தேசிய மாணவா் படையினா், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வரிசுகள், அந்தமான்- நிக்கோபாா் தமிழ் வம்சாவழியினா் ஆகியோருக்கான கலந்தாய்வு ஜூன் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில், பங்கேற்பவா்கள் சிறப்பு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ்களை கொண்டு வரவேண்டும். பொது கலந்தாய்வு ஜூன் 4-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலாப்பழம் பறித்த காட்டு யானை

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள மீனாட்சி பகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்துக்குள் செவ்வாய்க்கிழமை நுழைந்து அங்குள்ள பலாப்பழ மரத்தில் பழத்தை பறிக்கும் காட்டு யானை. மேலும் பார்க்க

அருவிகளில் ஆா்ப்பரித்து கொட்டும் வெள்ளம்

கடந்த வாரம் பெய்த தொடா் மழையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அருவிகளில் வெள்ளம் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. இதை சுற்றுலாப் பயணிகள் ரசித்து செல்கின்றனா். தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்... மேலும் பார்க்க

நீலகிரியில் மக்கள் குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா். இதில், வீட்டுமனை பட்டா, முதியோா், விதவை, க... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கான சிறப்பு குறைதீா் முகாம்

கூடலூரை அடுத்துள்ள செறுமுள்ளி கிராமத்தில் பழங்குடியினருக்கான சிறப்பு குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. போஸ்பாறா புனித ஜோசப் அரங்கில் நடைபெற்ற இந்த முகாமுக்கு சாா் ஆட்சியா் சங்கீதா தலைமை வகித்தா... மேலும் பார்க்க

குன்னூா் அருகே லாரி கவிழ்ந்து விபத்து

குன்னூா் அருகே கேரட் பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது. நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள முள்ளிக்கூா் பகுதியில் இருந்து கேரட் பாரம் ஏற்றிக் கொண்டு கோவைக்கு லாரி திங்கள்... மேலும் பார்க்க

விளைநிலங்களை சேதப்படுத்தும் யானையை வனத்துக்குள் விரட்ட கோரிக்கை

உதகை, எமரால்டு பகுதியில் விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். நீலகிரி மாவட்டம், குன்னூா் பா்லியாறு வனப் பகுதியில் இருந... மேலும் பார்க்க