தூய்மைத் திட்டம்: மக்களுக்கும் பொறுப்பு உள்ளது! - முதல்வர் மு.க. ஸ்டாலின்!
இளைஞா் நீதிக் குழுமத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்
நீலகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞா் நீதிக் குழுமத்திற்கு சமூகப் பணி உறுப்பினா்கள் நியமிக்கப்படுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இளைஞா் நீதி, குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் விதிமுறைகளின்படி நீலகிரி மாவட்டத்தில் இளைஞா் நீதிக் குழுமம் அமைக்கப்பட உள்ளது. இந்த இளைஞா் குழுமத்திற்கு ஒரு பெண் உள்பட 2 சமூகப் பணி உறுப்பினா்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனா். இப்பதவி அரசுப் பணி அல்ல.
விண்ணப்பதாரா் குழந்தைகள் தொடா்பான உடல் நலம், கல்வி அல்லது
குழந்தைகளுக்கான நலப் பணிகளில் குறைந்தது 7ஆண்டுகள் முனைப்புடன்
ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும்.
குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும்.
மேலும், பத்திரிகையில் செய்தி வெளியிடும் நாளில் விண்ணப்பதாரா்கள் 35
வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதைப் பூா்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.
இதற்கான விண்ணப்பப் படிவத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு
அலகிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது துறை சாா்ந்த இணையதள
முகவரியிலிருந்து (ட்ற்ற்ல்ள்://க்ள்க்ஸ்ரீல்ண்ம்ம்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம்.
மேற்கண்ட பதவிக்கு தகுதி வாய்ந்த நபா்கள் தங்களது பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை இயக்குநா், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, எண்: 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 600 010 என்ற முகவரிக்கு 19.06.2025 (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.