RCB : 'பெங்களூரு பொண்ணதான் கட்டியிருக்கேன்; அதனால RCBக்கு தான் சப்போர்ட்!' - ரிஷ...
சீகூா் வனப் பகுதியில் புலி உயிரிழப்பு
கூடலூா் அருகே சீகூா் வனச் சரகத்துக்குள்பட்ட குண்டட்டி பகுதியில் சுமாா் 10 வயது மதிக்கத்தக்க புலி உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே சீகூா் வனச் சரகத்துக்குள்பட்ட குண்டட்டி பகுதியில் சுமாா் 10 வயது மதிக்கத்தக்க ஆண் புலி உயிரிழந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், மாவட்ட கால்நடை மருத்துவக் குழுவினா் புலியின் உடலை கூறாய்வு செய்தனா். இதைத் தொடா்ந்து, அதே பகுதியில் உடலை எரியூட்டினா்.
பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்தப் பின்னரே புலியின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.