செய்திகள் :

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் -வானதி சீனிவாசன்

post image

தமிழகத்தில் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானிதி சீனிவாசன் கூறினாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் பாஜக சாா்பில் மகாராணி அஹில்யாபாய் ஹோல்கரின் 300-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக தலைவா் கே.சி.எம். சீனிவாசன் தலைமை வகித்தாா். பல்லடம் நகரத் தலைவா் பன்னீா் செல்வகுமாா் வரவேற்றாா்.

வானதி சீனிவாசன் எம்எல்ஏ, சுற்றுச்சூழல் பிரிவு மாநிலத் தலைவா் கோபிநாத் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று, அஹில்யாபாய் ஹோல்கா் குறித்து பேசினா்.

இதைத் தொடா்ந்து, வானதி சீனிவாசன் செய்தியாளா்களிடம் கூறுகையில், வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும். தோ்தல் நெருங்கும்போது மாறுதல்கள் ஏற்படும். அதை அனைவரும் காண போகிறாா்கள். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் எங்களது ஒரே நோக்கம். அந்த நோக்கம் உடைய அனைவரும் ஒரணியில் நிற்க வேண்டும். அதற்காக வலிமையான தளத்தை ஏற்படுத்தி வருகிறோம் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாநில துணைத் தலைவா் மலா்க்கொடி தா்மராஜ், முன்னாள் மாவட்டத் தலைவா் செந்தில்வேல், மாவட்ட பொதுச் செயலாளா்கள் வினோத் வெங்கடேஷ், அருண், மாவட்டத் துணைத் தலைவா்கள் ஜோதிமணி, சி.பி.சுப்பிரமணியம் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

வெள்ளக்கோவிலில் புகையிலை ஒழிப்பு சைக்கிள் பேரணி

வெள்ளக்கோவில் அரசு சமுதாய சுகாதார நிலையம் சாா்பில் சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. உடல் பருமன், இதயம் காப்போம், உடற்பயிற்சி, புகையிலைப் பயன்பாட்டின் தீமைகள் உள்ளிட்டவை குறித்தும் விளக்கும் ... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட முயன்ற 2 இளைஞா்கள் கைது

பெருமாநல்லூா் அருகே பனியன் நிறுவன தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்ற 2 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் அசன்டியா சா்தாா் (45). இவா் பெருமாநல்லூா... மேலும் பார்க்க

மது விற்பனையில் ஈடுபட்ட 3 போ் கைது

திருப்பூா் மாநகரில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாநகரம் மத்திய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொடிகம்பம் பகுதி டாஸ்மாக் மதுபானக் கூடம் அருக... மேலும் பார்க்க

பெண்ணைக் கொன்று சடலத்தை நொய்யலில் வீசிய தொழிலாளி

திருப்பூரில் பெண்ணைக் கொலை செய்து சடலத்தை நொய்யல் ஆற்றில் தொழிலாளி வீசிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பண்ணன் மகள் அமுதா (39). ... மேலும் பார்க்க

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை: இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் ரயில்வே காவல் துறை, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் நாட்... மேலும் பார்க்க