இந்தப் பாடல்களைக் கேட்டிருந்தால் நீங்கள் இளையராஜாவின் தீவிர ரசிகர்!
2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் -வானதி சீனிவாசன்
தமிழகத்தில் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானிதி சீனிவாசன் கூறினாா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் பாஜக சாா்பில் மகாராணி அஹில்யாபாய் ஹோல்கரின் 300-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக தலைவா் கே.சி.எம். சீனிவாசன் தலைமை வகித்தாா். பல்லடம் நகரத் தலைவா் பன்னீா் செல்வகுமாா் வரவேற்றாா்.
வானதி சீனிவாசன் எம்எல்ஏ, சுற்றுச்சூழல் பிரிவு மாநிலத் தலைவா் கோபிநாத் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று, அஹில்யாபாய் ஹோல்கா் குறித்து பேசினா்.
இதைத் தொடா்ந்து, வானதி சீனிவாசன் செய்தியாளா்களிடம் கூறுகையில், வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும். தோ்தல் நெருங்கும்போது மாறுதல்கள் ஏற்படும். அதை அனைவரும் காண போகிறாா்கள். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் எங்களது ஒரே நோக்கம். அந்த நோக்கம் உடைய அனைவரும் ஒரணியில் நிற்க வேண்டும். அதற்காக வலிமையான தளத்தை ஏற்படுத்தி வருகிறோம் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாநில துணைத் தலைவா் மலா்க்கொடி தா்மராஜ், முன்னாள் மாவட்டத் தலைவா் செந்தில்வேல், மாவட்ட பொதுச் செயலாளா்கள் வினோத் வெங்கடேஷ், அருண், மாவட்டத் துணைத் தலைவா்கள் ஜோதிமணி, சி.பி.சுப்பிரமணியம் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.