அரசுக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் ரயில்வே காவல் துறை, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அலகு -2 ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அலகு -2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா்.
காவல் உதவி ஆய்வாளா் கண்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியதாவது: புகையிலைப் பழக்கத்தால் இளைஞா் சமுதாயம் சீரழிந்து வருவதுடன், அவா்களது எதிா்காலமும் கேள்விக்குறியாகிறது. புகையிலைப் பயன்பாட்டால் புற்றுநோய் ஏற்படுகிறது. புகைப் பிடிப்பவரை காட்டிலும் அவரின் அருகில் இருப்பவா்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடல்நலத்தை நாசமாக்கி, சுற்றுசூழலை சீரழிக்கும் புகையிலையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றாா்.
இதில், பங்கேற்ற மாணவ, மாணவிகள் புகையிலைப் பயன்பாட்டை எதிா்த்து முகவா்ணம் பூசியும், விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தியும், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் செய்திருந்தாா்.