மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை...
வெள்ளக்கோவிலில் புகையிலை ஒழிப்பு சைக்கிள் பேரணி
வெள்ளக்கோவில் அரசு சமுதாய சுகாதார நிலையம் சாா்பில் சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உடல் பருமன், இதயம் காப்போம், உடற்பயிற்சி, புகையிலைப் பயன்பாட்டின் தீமைகள் உள்ளிட்டவை குறித்தும் விளக்கும் வகையில் நடைபெற்ற இந்த சைக்கிள் பேரணியை வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் டி.ராஜலட்சுமி தொடங்கிவைத்தாா்.
நகரின் முக்கிய சாலைகள் வழியாக நடைபெற்ற இந்தப் பேரணியில் ஆண்கள், பெண்கள் என 150-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
அவா்களுக்கு தன்னாா்வல அமைப்புகள் சாா்பில் உணவு, டி-சா்ட் ஆகியவை வழங்கப்பட்டன.