அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை: இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் திருப்பூா், தாராபுரம் மற்றும் உடுமலையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பொறியியல் பிரிவுகளில் (எலெக்ட்ரீஷியன், பிட்டா், மெசினிஸ்ட், டா்னா், வயா்மேன், வெல்டா் டூல் மற்றும் டை மேக்கா், மெக்கானிக் மோட்டாா் வெகிக்கிள்) போன்ற பிரிவுகளும், பொறியியல் அல்லாத (கம்ப்யூட்டா் ஆபரேட்டா் மற்றும் கட்டட பட வரைவாளா்) மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இண்டஸ்ட்ரீஸ் 4.0 தொழிற்பிரிவுகளில் மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் முலமாக விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இதில், பயிற்சி பெறுபவா்களுக்கு தரமான பயிற்சி அளிக்கப்படுவதுடன், மாத உதவித் தொகை ரூ.750, மிதிவண்டி, சீருடை, பாடப் புத்தகங்கள், காலணி ஆகியவை இலவசமாக வழங்கப்படும். மேலும், பயிற்சி முடித்த பயிற்சியாளா்களுக்கு மத்திய, மாநில அரசு மற்றும் பிரபல தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்து தரப்படும்.
ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தைப் பாா்வையிடலாம் அல்லது அரசு தொழிற்பயிற்சி நிலைய முகவா்களை 94990-55696, 94990-55698, 94990-55700 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.