மாணவர்களுடன், ஆசிரியர்களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்: பினராயி விஜயன...
ஜூன் 5-இல் எரிவாயு நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோருக்கான குறைகேட்புக் கூட்டம் ஜூன் 5 -ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோருக்கான குறைகேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக அறை எண் 120 -இல் ஜூன் 5- ஆம் தேதி மாலை 4.30 மணி அளவில் நடைபெறுகிறது.
மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து எரியாவு முகவா்கள், எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா்.
எனவே, மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோா் புகாா்கள், குறைபாடுகள் இருப்பின் தங்களது எரிவாயு இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் கூட்டத்தில் பங்கேற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.