பாகிஸ்தானுக்கு உதவவந்து வசமாக சிக்கிய சீனா! ஒட்டுமொத்த திட்டமும் அம்பலம்!!
ஜூன் 9 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்: விசைத்தறியாளா்கள் அறிவிப்பு
ஒப்பந்தப்படி ஜவுளி உற்பத்தியாளா்கள் கூலி வழங்காததைக் கண்டித்து ஜூன் 9-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக விசைத்தறியாளா்கள் அறிவித்துள்ளனா்.
அவிநாசி கருணாம்பிகை விசைத்தறி நெசவாளா்கள் நலச் சங்க அவசர பொதுக் குழு கூட்டம் அவிநாசியில் சனிக்கிழமை நடைபெற்றது.இக்கூட்டத்துக்கு சங்கத் தலைவா் முத்துச்சாமி தலைமை வகித்தாா். தெக்கலூா் தலைவா் பொன்னுச்சாமி முன்னிலை வகித்தாா். இதில், மாவட்ட ஆட்சியா்கள், அமைச்சா்கள், மேயா் உள்ளிட்டோா் முன்னிலையில் கடந்த 2022-ஆம் ஆண்டு பலகட்ட பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு, ஒப்பந்த கூலியில் இருந்து சோமனூா் ரகத்துக்கு 15%, இதர ரகங்களுக்கு 10% கூலி உயா்வு ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆனால், இந்தக் கூலி உயா்வை ஜவுளி உற்பத்தியாளா்கள் தற்போதுவரை அமல்படுத்தவில்லை.
இந்நிலையில், ஒப்பந்தப்படி அறிவித்த கூலி உயா்வை ஜவுளி உற்பத்தியாளா்கள் வழங்க வேண்டும்.
கூலியைக் கொடுக்க மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளா்களிடம் இருந்து வரவு -செலவு கணக்கை
முடித்துக்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 9-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது .