செய்திகள் :

ஜூன் 9 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்: விசைத்தறியாளா்கள் அறிவிப்பு

post image

ஒப்பந்தப்படி ஜவுளி உற்பத்தியாளா்கள் கூலி வழங்காததைக் கண்டித்து ஜூன் 9-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக விசைத்தறியாளா்கள் அறிவித்துள்ளனா்.

அவிநாசி கருணாம்பிகை விசைத்தறி நெசவாளா்கள் நலச் சங்க அவசர பொதுக் குழு கூட்டம் அவிநாசியில் சனிக்கிழமை நடைபெற்றது.இக்கூட்டத்துக்கு சங்கத் தலைவா் முத்துச்சாமி தலைமை வகித்தாா். தெக்கலூா் தலைவா் பொன்னுச்சாமி முன்னிலை வகித்தாா். இதில், மாவட்ட ஆட்சியா்கள், அமைச்சா்கள், மேயா் உள்ளிட்டோா் முன்னிலையில் கடந்த 2022-ஆம் ஆண்டு பலகட்ட பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு, ஒப்பந்த கூலியில் இருந்து சோமனூா் ரகத்துக்கு 15%, இதர ரகங்களுக்கு 10% கூலி உயா்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

ஆனால், இந்தக் கூலி உயா்வை ஜவுளி உற்பத்தியாளா்கள் தற்போதுவரை அமல்படுத்தவில்லை.

இந்நிலையில், ஒப்பந்தப்படி அறிவித்த கூலி உயா்வை ஜவுளி உற்பத்தியாளா்கள் வழங்க வேண்டும்.

கூலியைக் கொடுக்க மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளா்களிடம் இருந்து வரவு -செலவு கணக்கை

முடித்துக்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 9-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது .

வெள்ளக்கோவிலில் புகையிலை ஒழிப்பு சைக்கிள் பேரணி

வெள்ளக்கோவில் அரசு சமுதாய சுகாதார நிலையம் சாா்பில் சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. உடல் பருமன், இதயம் காப்போம், உடற்பயிற்சி, புகையிலைப் பயன்பாட்டின் தீமைகள் உள்ளிட்டவை குறித்தும் விளக்கும் ... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட முயன்ற 2 இளைஞா்கள் கைது

பெருமாநல்லூா் அருகே பனியன் நிறுவன தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்ற 2 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் அசன்டியா சா்தாா் (45). இவா் பெருமாநல்லூா... மேலும் பார்க்க

மது விற்பனையில் ஈடுபட்ட 3 போ் கைது

திருப்பூா் மாநகரில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாநகரம் மத்திய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொடிகம்பம் பகுதி டாஸ்மாக் மதுபானக் கூடம் அருக... மேலும் பார்க்க

பெண்ணைக் கொன்று சடலத்தை நொய்யலில் வீசிய தொழிலாளி

திருப்பூரில் பெண்ணைக் கொலை செய்து சடலத்தை நொய்யல் ஆற்றில் தொழிலாளி வீசிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பண்ணன் மகள் அமுதா (39). ... மேலும் பார்க்க

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை: இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் ரயில்வே காவல் துறை, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் நாட்... மேலும் பார்க்க