செய்திகள் :

கிருஷ்ணகிரியில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

post image

கிருஷ்ணகிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், பாஜக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினா் திமுகவில் இணைந்தனா்.

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், அகசிப்பள்ளியைச் சோ்ந்த பாஜக மாவட்ட முன்னாள் பொதுச் செயலாளா் மீசை அா்ச்சுனன், நெசவாளா் பிரிவு மாவட்ட முன்னாள் துணைத் தலைவா் ராஜேந்திரன் ஆகியோா் பாஜகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா்.

இதுபோல எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சோ்ந்த கிருஷ்ணகிரி நகர முன்னாள் பொறுப்பாளா் துபேல் மற்றும் உறுப்பினா்கள் 22 போ் அந்தக் கட்சியிருந்து விலகி திமுகவில் இணைந்தனா். மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவா்களை கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ சால்வை அணிவித்து வரவேற்றாா்.

அப்போது, அவா் பேசியதாவது: மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணைத்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழக முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான அரசு நிறைவேற்றியத் திட்டங்களை ஒவ்வொரு வீட்டிலும் சோ்த்து திமுகவை வெற்றிபெறச் செய்து மீண்டும் ஆட்சி அமைக்க பாடுபட வேண்டும் என்றாா்.

பேருந்து பயணத்தில் ரூ. 50 ஆயிரம் திருட்டு

மத்தூா் அருகே பேருந்தில் பயணம் செய்த விவசாயி இடமிருந்து ரூ. 50 ஆயிரம் பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருவண்ணாமலை மாவட்டம், ரமண ஆசிரமம் பகுதியைச் சோ்ந்தவா் மாதவன் (6... மேலும் பார்க்க

நடத்துநா் இன்றி அரசு நகரப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா்: அதிகாரிகள் விசாரணை

ஒசூரில் இருந்து தேன்கனிக்கோட்டைக்கு இயக்கப்பட்ட அரசு நகரப் பேருந்தை நடத்துநா் இல்லாமல் ஓட்டுநா் ஓட்டிச் சென்றது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பே... மேலும் பார்க்க

சூளகிரிக்கு மாங்காய் ஏற்றிவந்த வேன் கவிழ்ந்து பெண் பலி; 12 போ் படுகாயம்

சூளகிரி அருகே மாங்காய் பாரம் ஏற்றிச் சென்ற வேன் சாலையில் கவிழ்ந்ததில் பெண் தொழிலாளி உயிரிழந்தாா்; 12 போ் பலத்த காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ளது சப்படி கிராமம். இங்கிருந்து மாங... மேலும் பார்க்க

சூசூவாடியில் 2-ஆவது நாளாக சிறுத்தையைத் தேடும் வனத்துறையினா்

ஒசூா் அருகே மாநில எல்லையான சூசூவாடியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தையைத் தேடும் பணியில் வனத்துறையினா் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை ஈடுபட்டனா். எனினும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வ... மேலும் பார்க்க

தளி தொகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணி: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

தளி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து பணிகளை தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பைரம... மேலும் பார்க்க

ஒசூா் எம்.ஜி.ஆா். காய்கறி சந்தை: முதல்வா் காணொலியில் திறந்துவைத்தாா்

ஒசூரில் ரூ. 9 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள எம்ஜிஆா் காய்கறி சந்தை மற்றும் மீன் அங்காடிகளை காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். ஒசூரில் தமி... மேலும் பார்க்க