பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களின் உயா்கல்வி சோ்க்கையை உறுதி செய்ய அறி...
அஞ்செட்டி வனப் பகுதியில் பெண் யானையின் எலும்புக்கூடு மீட்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி காப்புக் காட்டில் பெண் யானையின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
அஞ்செட்டி வனச்சரகம், குந்துக்கோட்டை பிரிவு, பனை காப்புக்காடு உச்சகான்குட்டை சரகப் பகுதியில், கடந்த 27-ஆம் தேதி வனப் பணியாளா்கள் ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது பெண் யானையின் எலும்புக்கூடு கிடப்பது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, ஒசூா் வனக்கோட்ட வன உயிரின காப்பாளா் ஜெகதீஷ் சுதாகா் உத்தரவின்பேரில், ஒசூா் வனக்கோட்ட வனப் பாதுகாவலா் ராஜமாரியப்பன், அஞ்செட்டி வனச்சரக அலுவலா் கோவிந்தன் மற்றும் ஒசூா் தன்னாா்வ நிறுவனத்தின் சஞ்சீவ் குமாா் ஆகியோா் அடங்கிய குழு முன்னிலையில் கால்நடை உதவி மருத்துவா் ஜி.ஜெயச்சந்திரன் இறந்த பெண் யானையின் உடலை பிரேதப் பரிசோதனை செய்தாா்.
இதில் உயிரிழந்த பெண் யானைக்கு சுமாா் 7 வயது இருக்கும். இறந்த யானையின் உடலில் காயங்கள் ஏதுமில்லை. எனவே, யானை இயற்கையாக உயிரிழந்திருக்கலாம் என வனத் துறையினா் தெரிவித்தனா்.