செய்திகள் :

மோடியின் சிக்கிம் பயணம் கடைசி நேரத்தில் ரத்து! ஏன்?

post image

பிரதமர் நரேந்திர மோடியின் சிக்கிம் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தின் பாக்டோக்ராவில் இருந்து காணொலி காட்சி மூலம் சிக்கிம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார்.

சிக்கிம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் இன்று காலை கலந்துகொள்ள திட்டமிட்டிருந்தார்.

இதற்காக சிக்கிமின் கேங்டாக்கில் மிகப்பெரிய அளவில் விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலை 11 மணிக்கு தொடங்கும் நிகழ்வு ஒரு மணிநேரம் முன்னதாக காலை 10 மணிக்கே தொடங்கும் என்று சற்றுமுன் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், திடீரென்று பிரதமர் மோடியின் பயணம் ரத்து செய்யப்படுவதாகவும், மக்கள் மத்தியில் மேற்கு வங்கத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் அவர் உரையாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், சாலைகளில் கூடியிருந்த சிக்கிம் மக்களும் பாஜக தொண்டர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

மோசமான வானிலை காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், காணொலி மூலம் சிக்கிம் 50 ஆண்டுகள் விழாவில் மோடி கலந்துகொண்டுள்ளார்.

இந்த விழாவில், நம்சி மாவட்டத்தில் ரூ. 750 கோடி மதிப்பில் 500 படுக்கையுடன் கட்டப்பட்டுள்ள மாவட்ட அரசு மருத்துவமனை, சங்கச்சோலிங் பகுதியில் பயணிகள் ரோப் வழி, காங்டாக் மாவட்டத்திலுள்ள சங்கோலா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அடல் பிஹாரி வாஜபேயி சிலை உள்ளிட்டவை மோடி திறந்துவைக்கிறார்.

தொடர்ந்து, மேற்கு வங்கம், பிகார், உத்தரப் பிரதேச நிகழ்வுகளில் கலந்துகொண்டு ரூ. 70,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கிறார்.

இதையும் படிக்க : டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகினார் எலான் மஸ்க்!

மகாராஷ்டிரம்: வெளிநாட்டு நிதி பெற முதல்வா் நிவாரண நிதிக்கு அனுமதி

மகாராஷ்டிர முதல்வா் நிவாரண நிதிக்கு வெளிநாட்டு நிதி பெறும் வகையில், வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2010-இன்கீழ் (எஃப்சிஆா்ஏ) உரிமம் வழங்கப்பட்டது. மழை வெள்ளம், வறட்சி மற்றும் தீ விபத்துகள... மேலும் பார்க்க

தாஜ் மஹாலுக்கு ட்ரோன் எதிா்ப்பு அமைப்பு பாதுகாப்பு

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், அங்கு ட்ரோன் எதிா்ப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். கடந்த ... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் கனமழை, நிலச்சரிவால் 5 பேர் பலி! மீட்புப் பணிகள் தீவிரம்!

கர்நாடகத்தின் கடலோர மாவட்டத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகியுள்ளனர். கடலோர மாவட்டமான தக்‌ஷின கன்னடா மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வீட்டின் ச... மேலும் பார்க்க

கேரளத்தில் நாட்டுப் படகு கவிழ்ந்து 2 பேர் பலி

கேரளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது நாட்டுப் படகு கவிழ்ந்ததில் 2 பலியானார்கள். தெற்கு கேரள மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் நாட்டுப் படகில் வெள்ளிக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந... மேலும் பார்க்க

பிரசார நடைப்பயணத்தில் பெண்களுக்கு குங்குமம்? பாஜக மறுப்பு!

பாஜகவின் பிரசார நடைப்பயணத்தில் குங்குமம் வழங்கப்படும் என்று வதந்திக்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக் காலத்தைக் கொண்டாடும்விதமாக, ஜூன் 9 ஆம் தேதியில் பாஜகவினர்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் புதியதாக 84 கரோனா பாதிப்புகள் உறுதி! சிகிச்சையில் 467 பேர்!

மகாராஷ்டிர மாநிலத்தில் புதியதாக 84 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளில் மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் சூழலில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும்... மேலும் பார்க்க