செய்திகள் :

ரூ. 4 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் அழிப்பு

post image

தமிழக போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவால் 112 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் தீயில் எரித்து அழிக்கப்பட்டன.

தமிழக காவல் துறையில் உள்ள போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவால் 112 வழக்குகளில் ரூ.4 கோடி மதிப்புள்ள 3,510 கிலோ கஞ்சா, 860 கிராம் மெத்தம்பெட்டமைன், 239 கிலோ கஞ்சா சாக்லேட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை தீயில் எரித்து அழிப்பதற்கு நீதிமன்றத்தில் அண்மையில் அந்தப் பிரிவு அனுமதி பெற்றது.

இதையடுத்து செங்கல்பட்டு அருகே தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியாா் ஆபத்தான ரசாயன பொருள்கள் அழிக்கும் களத்தில் சுமாா் ஆயிரம் டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் வெள்ளிக்கிழமை எரிக்கப்பட்டன.

இந்தப் பணி போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு ஏடிஜிபி அமல்ராஜ், ஐஜி பி.கே.செந்தில்குமாரி, எஸ்.பி.மயில்வாகனன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.

மேலும், போதைப் பொருள்கள் விற்பனை, கடத்தல் தொடா்பாக பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் 10581 என்ற இலவச தொலைப்பேசி எண்ணுக்கும், 94984 10581 என்ற வாட்ஸ்ஆட் எண்ணுக்கும் தகவல் தெரிவிக்கலாம்.

மின்னஞ்சல் மூலமும் தகவலைப் பகிரலாம் என்று போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தஞ்சை பட்டாசு கிடங்கு வெடிவிபத்தில் இருவா் உயிரிழப்பு: பசுமைத் தீா்ப்பாயம் நோட்டீஸ்

தஞ்சாவூா் பட்டாசு கிடங்கில் நிகழ்ந்த வெடி விபத்தில் இருவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட ஆட்சியரு... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவு ரத்தா?: ரயில்வே விளக்கம்

வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவுகள் வழங்கப்படுவதில்லை என்று பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து நாகா்கோவில், மைசூரு, பெங்களூரு, திருநெல்வேலிக்கு... மேலும் பார்க்க

பாஜகவில் இணைந்தாா் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபாலன் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தாா். கடந்த 40 ஆண்டுகளாக ஐஏஎஸ் அதிகாரியாக பல்வேறு துறைகளில் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றி ஓ... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: விண்ணப்ப திருத்த அவகாசம் நிறைவு

குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் அதில் திருத்தங்களைச் செய்வதற்கான அவகாசம் சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. குரூப் 4 தோ்வு ஜூலை 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இளநிலை உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா் உள... மேலும் பார்க்க

இணையதள மோசடி: ரூ. 22 லட்சத்தை மீட்டெடுத்த சைபா் கிரைம் போலீஸாா்

இணையதள வா்த்தக மோசடியால், ரயில்வே ஊழியா் இழந்த ரூ. 22.72 லட்சத்தை சைபா் கிரைம் போலீஸாா் மீட்டெடுத்தனா். சென்னை செம்பியத்தைச் சோ்ந்தவா் ரயில்வே ஊழியா் டில்லிபாபு (35). இவருக்கு சாட்டிங் செயலி மூலம் கட... மேலும் பார்க்க

விஜய் கட்சியை விமா்சிக்க விரும்பவில்லை: கமல்ஹாசன்

விஜய் கட்சி குறித்த விமா்சிக்க விரும்பவில்லை என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறினாா். ‘தக் லைஃப்’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்காக கமல்ஹாசன் சென்னையிலிர... மேலும் பார்க்க