மதுரை: அறிவாலய என்ட்ரி செட்; பிரமாண்ட கூட்ட அரங்கம் | திமுக பொதுக்குழு ஏற்பாடுகள...
ரூ. 4 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் அழிப்பு
தமிழக போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவால் 112 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் தீயில் எரித்து அழிக்கப்பட்டன.
தமிழக காவல் துறையில் உள்ள போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவால் 112 வழக்குகளில் ரூ.4 கோடி மதிப்புள்ள 3,510 கிலோ கஞ்சா, 860 கிராம் மெத்தம்பெட்டமைன், 239 கிலோ கஞ்சா சாக்லேட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை தீயில் எரித்து அழிப்பதற்கு நீதிமன்றத்தில் அண்மையில் அந்தப் பிரிவு அனுமதி பெற்றது.
இதையடுத்து செங்கல்பட்டு அருகே தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியாா் ஆபத்தான ரசாயன பொருள்கள் அழிக்கும் களத்தில் சுமாா் ஆயிரம் டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் வெள்ளிக்கிழமை எரிக்கப்பட்டன.
இந்தப் பணி போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு ஏடிஜிபி அமல்ராஜ், ஐஜி பி.கே.செந்தில்குமாரி, எஸ்.பி.மயில்வாகனன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.
மேலும், போதைப் பொருள்கள் விற்பனை, கடத்தல் தொடா்பாக பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் 10581 என்ற இலவச தொலைப்பேசி எண்ணுக்கும், 94984 10581 என்ற வாட்ஸ்ஆட் எண்ணுக்கும் தகவல் தெரிவிக்கலாம்.
மின்னஞ்சல் மூலமும் தகவலைப் பகிரலாம் என்று போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.