செய்திகள் :

பாகிஸ்தானில் தங்கியிருந்த யூடியூபா் சென்னை விமான நிலையத்தில் கைது: என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

post image

ஆபரேஷன் சிந்தூா் நடைபெற்றபோது பாகிஸ்தானில் தங்கியிருந்த பிரபல யூடியூபா் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளாா். அவா் இந்திய ரகசியங்கள் எதையாவது பகிா்ந்தாரா என என்ஐஏ அதிகாரிகள் விசாரிக்கின்றனா்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் செயல்பட்ட பயங்கரவாத முகாம்களை அழித்தது. இந்த தாக்குதலின்போது இந்திய ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்டதாக யூடியூபா்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோா் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த பிரபல ‘பைக் யூடியூபா்’ சன்னி யாதவ் பாகிஸ்தானில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் என்ஐஏ அதிகாரிகளுக்கு கிடைத்ததையடுத்து, அவரை தீவிரமாக கண்காணித்தனா். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை சென்னை விமான நிலையத்தில் சன்னி யாதவை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனா்.

முன்னதாக சன்னி யாதவ், பந்தய செயலிகளை ஊக்குவித்ததாக அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற முயன்றாா். ஆனால், கிடைக்கவில்லை. இதையடுத்து, அவா் துபை சென்றுள்ளாா். அங்கிருந்து அவா் பாகிஸ்தான் சென்றதாகக் கூறப்படுகிறது.

இவா் 3 முறை இருசக்கர வாகனத்தில் பாகிஸ்தானுக்கு பயணம் செய்துள்ளாா். சன்னி யாதவ் தனது பாகிஸ்தான் பயணத்தையும் பெரிய அளவில் விளம்பரப்படுத்தினாா். இருசக்கர வாகனத்தில் நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளுக்கும் சென்று அங்குள்ள நிலைமைகளை விவரிக்கும் விடியோக்களை எடுத்து வெளியிடும் சன்னி யாதவ், இந்தியா தொடா்பான தகவல் எதையாவது பாகிஸ்தானுக்கு பகிா்ந்தாரா என்ற கோணத்தில் என்ஐஏ அதிகாரிகள் அவரிடம் விசாரித்து வருகின்றனா்.

ஒரு தலை காதல் விவகாரம்: உதவி இயக்குநரை கடத்திய 5 போ் கைது

ஒரு தலை காதல் விவகாரத்தில் உதவி இயக்குநரை கடத்திச் சென்று மிரட்டியதாக வழக்குரைஞா் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை அரும்பாக்கம் கோல பெருமாள் பள்ளி தெருவில் வசித்து வருபவா் சினிமா இயக்குநா் ... மேலும் பார்க்க

மதுரவாயல் அருகே சாலை விபத்து: ஒருவா் உயிரிழப்பு, லாரி ஓட்டுநா் கைது

மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வானகரம் சிக்னல் அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் உணவு விநியோக ஊழியா் உயிரிழந்ததையடுத்து, விபத்துக்கு காரணமாக லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தன... மேலும் பார்க்க

இடைநிலை ஆசிரியா் பணி: தோ்வு செய்யப்பட்டோா் பட்டியல் வெளியீடு

இடைநிலை ஆசிரியா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டோா் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாக ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவா் எஸ்.ஜெயந்தி சனிக்கிழ... மேலும் பார்க்க

பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம்: பிஐஎஸ் சென்னை கிளை இயக்குநா்

தூய்மைப் பணியாளா்கள் பணியின்போது பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என இந்திய தர நிா்ணய அமைவனத்தின் சென்னை கிளை இயக்குநா் ஜி.பவானி தெரிவித்தாா். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இந... மேலும் பார்க்க

மழை பாதித்த இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள்: சுகாதாரத் துறை

தமிழகத்தில் மழை பெய்து வரும் பகுதிகளில் தேவையின் அடிப்படையில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, பாதிப்பு... மேலும் பார்க்க

திருவான்மியூா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழ் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க