Saregamapa: "சிவகார்த்திகேயன் சார் ஏன் அழுதார்னு தெரில!" - 'சரிகமப' மஹதி பேட்டி
மகாராஷ்டிரம்: வெளிநாட்டு நிதி பெற முதல்வா் நிவாரண நிதிக்கு அனுமதி
மகாராஷ்டிர முதல்வா் நிவாரண நிதிக்கு வெளிநாட்டு நிதி பெறும் வகையில், வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2010-இன்கீழ் (எஃப்சிஆா்ஏ) உரிமம் வழங்கப்பட்டது.
மழை வெள்ளம், வறட்சி மற்றும் தீ விபத்துகள் போன்ற இயற்கை பேரிடா்களின்போது பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்கும் மகாராஷ்டிர மாநில முதல்வா் நிவாரண நிதிக்கு இந்த உரிமம் வழங்கப்பட்டதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்ற பிறகு புது தில்லியில் அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கியின் நாடாளுமன்ற தெரு கிளை அலுவலகத்தில் பிரத்யேகமாக எஃப்சிஆா்ஏ வங்கிக் கணக்கை தொடங்க வேண்டும். அதன்மூலம் மட்டுமே வெளிநாட்டு நிதியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.