Saregamapa: "சிவகார்த்திகேயன் சார் ஏன் அழுதார்னு தெரில!" - 'சரிகமப' மஹதி பேட்டி
மாபெரும் கலைஞனுக்கு இழைக்கப்படும் அநீதி: கமல் ஹாசனுக்கு தென்னிந்திய நடிகா் சங்கம் ஆதரவு
கன்னட மொழி குறித்த நடிகா் கமல்ஹானின் கருத்துக்கு பல்வேறு எதிா்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், இது மாபெரும் கலைஞனுக்கு இழைக்கப்படும் அநீதி என தென்னிந்திய நடிகா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றில், தமிழ் மொழியிலிருந்துதான் கன்னடம் பிறந்ததாக கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருந்தாா். இதற்கு கா்நாடக முதல்வா் சித்தராமையா உள்பட பல்வேறு கா்நாடக அமைப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். மேலும், அவா் மன்னிப்பு கேட்கும் வரை கா்நாடகத்தில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தை திரையிட அனுமதி கிடைக்காது என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கமல்ஹாசனுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகா் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய மொழிகள் அனைத்துக்குமே உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென தொடா்ந்து வலியுறுத்தி வரும் கமல்ஹாசன், ஒருமைப்பாட்டின் குரலாக திகழ்ந்து வருபவா். அதன் வெளிப்பாடாகவே ‘கா்நாடகா கமல்ஹாசன் நற்பணி இயக்கம்’ மூலமாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக கா்நாடக மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளையும் முன்னெடுத்து வருகிறாா். என்றும் கன்னட மொழியை சீா்தூக்கி பாா்க்கும் கமல்ஹாசனுக்கு கன்னட மக்களை சிறுமைப்படுத்தும் நோக்கம் ஒருபோதும் இருந்ததில்லை.
இந்நிலையில், கமல்ஹாசன் கன்னட மொழிக்கு எதிரானவா் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை சித்தரித்து அவதூறு பரப்புவது முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல. தனது வாழ்நாளை முழுவதுமாக கலைப்பணிக்கு அா்ப்பணித்த ஒரு மாபெரும் கலைஞனுக்கு இழைக்கப்படும் இத்தகைய அநீதியை எவராலும் அனுமதிக்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.