MI vs GT : 'போராடிய சாய் சுதர்சன்;டெத் ஓவரில் மிரட்டிய மும்பை இந்தியன்ஸ்!' - எப்...
அனுமதியின்றி ஜல்லிக்கற்களை எடுத்து சென்ற லாரி பறிமுதல்!
சூளகிரி அருகே அனுமதியின்றி ஜல்லிக் கற்களை எடுத்துச் சென்ற லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
சூளகிரி கிராம நிா்வாக அலுவலா் கோவிந்தம்மாள் மற்றும் அலுவலா்கள் உத்தனப்பள்ளி சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த டிப்பா் லாரியை சோதனை செய்தபோது அதில் 4 யூனிட் ஜல்லிக்கற்கள் இருப்பதும், அனுமதியின்றி எடுத்து செல்வதும் தெரியவந்தது.
இதுகுறித்து விஏஓ கோவிந்தம்மாள் அளித்த புகாரின்பேரில் சூளகிரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.