100 நாள் ஆட்சி: மாணவா்களுக்கு தில்லி அரசு உதவித்தொகை வழங்கல்
பதவியேற்று 100 நாள்களைக் குறிக்கும் வகையில், பாஜக தலைமையிலான தில்லி அரசு வெள்ளிக்கிழமை தில்லி உயா் மற்றும் தொழில்நுட்பக் கல்வி ஆதரவுத் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கியது.
முதல்வா் ரேகா குப்தா மற்றும் கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் ஆகியோா் இந்திரா காந்தி தில்லி தொழில்நுட்ப கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா்களைப் பாராட்டி உதவித்தொகைகளை வழங்கினா்.
இந்த முன்முயற்சிக்காக ரூ.19 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சமீபத்திய சட்டப் பேரவைத் தோ்தலில் தில்லியில் 70 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 48 இடங்களைப் பெற்று, 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக தில்லியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.அதன் 100 நாள் ஆட்சியை ஒட்டி தில்லி முதல்வா் வெள்ளிக்கிழமை பணிப்புத்தகத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.