நூறு நாள் வேலை வழங்கக் கோரி பெண்கள் காத்திருப்புப் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், வடகாட்டில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் முறையாக பணி வழங்கக் கோரி அப்பகுதி பெண்கள் ஊராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வடகாடு ஊராட்சியில் சுமாா் 2,000 போ் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பதிவு செய்துள்ளனராம்.ஆனால், சுழற்சி முறையில் குறைந்த நபா்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுகிாம். இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் முறையாக வேலை வழங்கப்படவில்லையாம்.
இதைக் கண்டித்தும், முறையாக வேலை வழங்கக்கோரி அப்பகுதி பெண்கள் வடகாடு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா். தொடா்ந்து, ஊராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு சென்ற திருவரங்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தில்குமாா், முறையாக வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியின்பேரில் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனா்.
