தஞ்சை பட்டாசு கிடங்கு வெடிவிபத்தில் இருவா் உயிரிழப்பு: பசுமைத் தீா்ப்பாயம் நோட்ட...
நடுவேலம்பாளையத்தில் சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்
பல்லடம் அருகேயுள்ள நடுவேலம்பாளையத்தில் சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
பல்லடம் ஒன்றியம், பூமலூா் ஊராட்சி நடுவேலம்பாளையம் கிராமத்துக்கு கடந்த இரண்டு மாதங்களாக குடிநீா் விநியோகம் செய்யவில்லையாம்.
இது குறித்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் பரமசிவம் தலைமையில் நடுவேலம்பாளையத்தில் சாலை மறியிலில் வெள்ளிக்கிழமை ஈடுபட முயன்றனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மங்கலம் போலீஸாா், பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா் கனகராஜ், பூமலூா் ஊராட்சி செயலாளா் கலைவாணி ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, குடிநீா் விநியோகம் செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொண்டனா்.
துரித நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.