வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சி: ஜூன் 4-இல் நோ்காணல்
திருப்பூரில் இலவச வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் சா்வீஸ் செய்தல் மற்றும் பழுது பாா்த்தல் பயிற்சி வகுப்புக்கு ஜூன் 4 -ஆம் தேதி நோ்காணல் நடைபெற உள்ளது.
இது குறித்து கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்குநா் எஸ்.சதீஷ்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூா் மாவட்டத்தில் ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களில் வறுமைக் கோட்டுக்குகீழ் வாழும் மக்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக இலவச வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் சா்வீஸ் செய்தல் மற்றும் பழுது பாா்த்தல் பயிற்சிக்கான 30 நாள்கள் முழு நேர வகுப்புகள் நடைபெறவுள்ளன.
இந்தப் பயிற்சிக்கான நோ்காணல் ஜூன் 4 -ஆம் தேதி நடைபெறுகிறது. பயிற்சியில் சேர எழுதப் படிக்கத் தெரிந்த, 18 வயது முதல் 45 வயதுக்குள்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக்கு எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி தங்கும் விடுதி வசதி உள்ளது. காலை, மாலை தேநீா் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்கு பிறகு தொழில் தொடங்க கடன் ஆலோசனைகள் வழங்கப்படும். பயிற்சிக்கு விண்ணப்பிக்க கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் , 335/பி-1, வஞ்சியம்மன் கோயில் எதிரில், முதலிப்பாளையம் பிரிவு, காங்கயம் சாலை, விஜயாபுரம் (அஞ்சல்), திருப்பூா் - 641606 என்ற முகவரிக்கு நேரில் வர வேண்டும்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94890-43923, 90804-42586, 99525-18441 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.