மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு உயா்கல்வி சாா்ந்த வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகள் தேவைப்படும் மாணவா்கள் மற்றும் பெற்றோா்களுக்காக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அறை எண் 705 -இல் உயா் கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
ஆகவே, உயா்கல்வி வழிகாட்டல் தொடா்பான உதவி தேவைப்படுவோா் நேரிலோ அல்லது 63826-15181, 0421-2971198 ஆகிய எண்களிலோ காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.