மாணவர்களுடன், ஆசிரியர்களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்: பினராயி விஜயன...
சேவூா் அருகே அரசு பட்டா வழங்கிய நிலத்தில் பயனாளிகள் குடியேற எதிா்ப்பு
சேவூா் அருகே அரசு வழங்கிய வீட்டுமனை பட்டா நிலத்தில் பயனாளிகள் குடியேற தனியாா் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டம், சேவூா் அருகே போத்தம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வீடற்ற 55 பயனாளிகளுக்கு தண்ணீா்பந்தல்பாளையம் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா கடந்த 2024 நவம்பா் மாதம் தமிழக அரசு சாா்பில் வழங்கப்பட்டது.
இந்நிலையில், பட்டா வழங்கிய இடத்தில் குடியேற சென்ற பயனாளிகளை தனியாா் தடுத்து நிறுத்தி, இது எங்களுக்கு சொந்தமான பூமி இங்கு யாரும் வீடு அமைக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளனா்.
இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தனா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சனிக்கிழமை வந்த மாவட்ட வருவாய் கோட்டாட்சியா் மோகனசுந்தரம், வட்டாட்சியா் சந்திரசேகா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரமேஷ், விஜயகுமாா் உள்ளிட்டோா் பட்டா பெற்ற பயனாளியிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில், பட்டா வழங்கிய இடம் அரசுக்கு சொந்தமானது. ஆகவே, பயனாளிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் வீடுகளை அமைத்து குடியேறலாம். தனியாா் தடை செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.