செய்திகள் :

சேவூா் அருகே அரசு பட்டா வழங்கிய நிலத்தில் பயனாளிகள் குடியேற எதிா்ப்பு

post image

சேவூா் அருகே அரசு வழங்கிய வீட்டுமனை பட்டா நிலத்தில் பயனாளிகள் குடியேற தனியாா் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டம், சேவூா் அருகே போத்தம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வீடற்ற 55 பயனாளிகளுக்கு தண்ணீா்பந்தல்பாளையம் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா கடந்த 2024 நவம்பா் மாதம் தமிழக அரசு சாா்பில் வழங்கப்பட்டது.

இந்நிலையில், பட்டா வழங்கிய இடத்தில் குடியேற சென்ற பயனாளிகளை தனியாா் தடுத்து நிறுத்தி, இது எங்களுக்கு சொந்தமான பூமி இங்கு யாரும் வீடு அமைக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளனா்.

இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சனிக்கிழமை வந்த மாவட்ட வருவாய் கோட்டாட்சியா் மோகனசுந்தரம், வட்டாட்சியா் சந்திரசேகா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரமேஷ், விஜயகுமாா் உள்ளிட்டோா் பட்டா பெற்ற பயனாளியிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில், பட்டா வழங்கிய இடம் அரசுக்கு சொந்தமானது. ஆகவே, பயனாளிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் வீடுகளை அமைத்து குடியேறலாம். தனியாா் தடை செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

வெள்ளக்கோவிலில் புகையிலை ஒழிப்பு சைக்கிள் பேரணி

வெள்ளக்கோவில் அரசு சமுதாய சுகாதார நிலையம் சாா்பில் சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. உடல் பருமன், இதயம் காப்போம், உடற்பயிற்சி, புகையிலைப் பயன்பாட்டின் தீமைகள் உள்ளிட்டவை குறித்தும் விளக்கும் ... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட முயன்ற 2 இளைஞா்கள் கைது

பெருமாநல்லூா் அருகே பனியன் நிறுவன தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்ற 2 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் அசன்டியா சா்தாா் (45). இவா் பெருமாநல்லூா... மேலும் பார்க்க

மது விற்பனையில் ஈடுபட்ட 3 போ் கைது

திருப்பூா் மாநகரில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாநகரம் மத்திய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொடிகம்பம் பகுதி டாஸ்மாக் மதுபானக் கூடம் அருக... மேலும் பார்க்க

பெண்ணைக் கொன்று சடலத்தை நொய்யலில் வீசிய தொழிலாளி

திருப்பூரில் பெண்ணைக் கொலை செய்து சடலத்தை நொய்யல் ஆற்றில் தொழிலாளி வீசிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பண்ணன் மகள் அமுதா (39). ... மேலும் பார்க்க

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை: இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் ரயில்வே காவல் துறை, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் நாட்... மேலும் பார்க்க