தஞ்சை பட்டாசு கிடங்கு வெடிவிபத்தில் இருவா் உயிரிழப்பு: பசுமைத் தீா்ப்பாயம் நோட்ட...
அடிக்கடி மின்தடையால் தண்ணீரின்றிப் பயிா்கள் கருகும் அபாயம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மின் மோட்டாா்களை இயக்க முடியாமல் பயிா்கள் தண்ணீரின்றி கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் கோ.ச. தனபதி:
மன்னா் காலத்து நில ஆவணங்கள் கோட்டாட்சியரகத்தில் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. நீதிமன்ற வழக்குகளுக்காக நில ஆவணங்களின் சான்றிட்ட நகல்களைப் பெற முடியவில்லை. அவற்றை முறையாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் தடை காரணமாக முழுமையாக தண்ணீா் பாய்ச்ச முடியவில்லை.
காவிரி- வைகை- குண்டாறு இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் மிசா. மாரிமுத்து: காவிரி- குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்கு தமிழக அரசு விரைந்து நிதி ஒதுக்கி, பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும். நீா்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூா்வார வேண்டும்.
தென்னை விவசாயிகள் சங்கத் தலைவா் செல்லத்துரை:
பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை வேளாண் பொறியியல் துறைக்குச் சொந்தமான 18 டிராக்டா்களையும் மீண்டும் கொண்டு வர வேண்டும். வாரத்தில் ஒரு நாளாவது தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்தால்தான் பயிா்களைக் காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால் பயிா்கள் கருகிப் போகும்.
தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ். பொன்னுசாமி:
ஆலங்குடி, கறம்பக்குடி வட்டாரங்களில் அண்மையில் வீசிய சூறைக் காற்றால் சேதமடைந்த வாழை, சோளப் பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அம்புக்கோவில் பகுதியில் மும்முனை மின் விநியோகத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். 100 நாள் வேலையை தடையின்றி வழங்க வேண்டும்.
கல்லணைக் கால்வாய் பாசனதாரா் சங்கத் தலைவா் கொக்குமடை ரமேஷ்: கல்லணைக் கால்வாயில் இருந்து கோடை சாகுபடிக்கு தண்ணீா் திறப்பதற்குள் கல்லணைக் கால்வாய் மேம்பாட்டுப் பணியை முடிக்க வேண்டும். ஏகணிவயலில் உள்ள தாழங்குளம், வேந்தன்குளம் ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும். சுப்பிரமணியபுரம், அமரசிம்மேந்திரபும், அத்தாணி, திருவாப்பாடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும்.
கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மு .அருணா பேசியதாவது: மாவட்டம் முழுவதும் கோடை சாகுபடிக்குத் தேவையான விதைகளும், இடுபொருள்களும் தாராளமாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், மணமேல்குடி, ஆவுடையாா்கோவில் மற்றும் அறந்தாங்கி ஆகிய வட்டாரங்கள் தவிர ஏனைய 10 வட்டாரங்களில் குறுவை சாகுபடித் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சாகுபடிக்கு மானியம் வழங்கப்படும் இத்திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அருணா.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், வேளாண் இணை இயக்குநா் மு. சங்கரலட்சுமி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ம. தீபாசங்கரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) உமா, வருவாய்க் கோட்டாட்சியா்கள் பா. ஐஸ்வா்யா (புதுக்கோட்டை), ச. சிவகுமாா் (அறந்தாங்கி) உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.