என்னை நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கே உண்டு; யாருக்கும் இல்லை: அன்புமணி
மதுபோதையில் தாறுமாறாக ஓடிய கார்; 20 அடி ஆழத்தில் கொள்ளிடம் ஆற்றில் பாய்ந்து 4 பேர் காயம்..
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனது நண்பரான ராஜா என்பவருடன் நேற்று மாலை திருச்சி ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை சாலையில் காரை வேகமாக ஓட்டி வந்துள்ளார்.
அப்போது, இருவரும் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. மதுபோதையில் ஒட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கு நின்று கொண்டிருந்த திவாகர், ஜெயபிரகாஷ் ஆகிய இரண்டு பேரை இடித்து தள்ளிவிட்டு சினிமா ஸ்டண்ட் காட்சிகளில் வருவதுபோல் சாலையிலிருந்து 20 அடி ஆழ கொள்ளிடம் ஆற்றில் பாய்ந்தது.

இதில், காரில் பயணித்த இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் இருந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதேபோல், கார் மோதியதில் காயமடைந்த திவாகர், ஜெயபிரகாஷ் ஆகிய இருவரும் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபோதையில் ஓட்டிவந்த கார் 20 அடி கொள்ளிடம் ஆற்றில் பாய்ந்த சம்பவம், திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.