செய்திகள் :

Kerala: பழங்குடி இளைஞரின் ஆடைகளை கழற்றி கட்டிவைத்து தாக்கிய கொடூர சம்பவம்.. நடந்தது என்ன?

post image

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் பழங்குடியின இளைஞர் சிஜூ (20) என்பவரின் ஆடைகளை கழற்றி மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதாக புகார் எழுந்தது.

கடந்த 24-ம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இளைஞர் சிஜூ-வை ஒருவர் கயிற்றால் கட்டி வைத்திருக்கும் வீடியோவில் பேசும் சிஜூ, கொலை வழக்கு ஒன்றில் தொடர்பு உள்ளதாக கூறும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

சிஜூ-வை கயிற்றால் கட்டி பிடித்து வைத்திருந்தவர், இளைஞர் தன்னை கடித்ததாக கூறும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.

அட்டபாடியில் கட்டி வைத்து தாக்கப்பட்ட இளைஞர் சிஜூ

பால் கொண்டு சென்ற பிக்கப் வாகனத்தின் குறுக்கே பாய்ந்ததுடன், வாகனத்தை கல்லால் எறிந்து உடைத்ததாக சிஜூ மீது பிக்கப் வாகன உரிமையாளரின் மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அதுபற்றி விசாரிக்க சிஜூ-வை அழைத்தபோது அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் கால் இடறி வாகனத்தின் முன்பு விழுந்த பட்டியலின இளைஞரை வேண்டும் என்றே கட்டி வைத்து தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த 24-ம் தேதி சிஜூ கோட்டத்தறா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அப்போது மருத்துவமனையில் இருந்து போலீஸுக்கு தகவல் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் எழுந்தது.

இப்போது வீடியோ வெளியானதைத் தொடர்ந்தே இந்த விவகாரம் பேசுபொருளானது.

அட்டப்பாடியில் மது என்ற பழங்குடியின இளைஞர் கடைகளில் உணவு திருடியதாக கம்பத்தில் கட்டி வைத்து அடித்து கொலை செய்த சம்பவம் கடந்த 2018-ம் ஆண்டு அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், அட்டப்பாடியில் பழங்குடியின இளைஞர் சிஜூ கட்டி வைத்து தக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மருத்துவமனைக்குச் சென்று சிஜூ-விடம் போலீஸார் வாக்குமூலம் பெற்றனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள்

சிஜூ அளித்த புகாரின் அடிப்படையில், அவரை தாக்கியதாக பால் வண்டி டிரைவர் சோலையூரைச் சேர்ந்த ரெஜி மேத்யூ(21), கிளீனர் ஆலப்புழாவைச் சேர்ந்த விஷ்ணுதாஸ்(31) ஆகியோரை அகளி போலீஸார் கைது செய்தனர்.

கோவையில் வைத்து அவர்களை கைது செய்த போலீஸார் மண்ணார்க்காடு பழங்குடியினர் பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மண்ணில் புதைக்கப்பட்ட ஏலக்காய் மூடைகள்; இலங்கைக்கு கடத்த முயன்ற தந்தை - மகனுக்கு போலீஸ் வலை!

கடந்த சில ஆண்டுகளாக தமிழக கடலோர பகுதிகளில் இருந்து போதைப்பொருள்கள், கஞ்சா, கடல் அட்டை போன்றவை இலங்கைக்கு கள்ளத்தனமாக கடத்தப்பட்டு வருகின்றன. இவற்றுடன் தற்போது சமையலுக்குப் பயன்படுத்தும் விராலி மஞ்சள்,... மேலும் பார்க்க

தூத்துக்குடி: நிலத்தைக் கேட்டு பெண்ணிற்குக் கொலை மிரட்டல்; திமுக எம்எல்ஏ-வின் சகோதரர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ., சண்முகையா. இவரது உடன்பிறந்த சகோதரர் அயிரவன்பட்டி முருகேசன்.தொழிலதிபரான இவர் முன்னாள் அ.தி.மு.க பிரமுகர். முருகேசன் ஓட்டப்... மேலும் பார்க்க

`தொழிலதிபரிடம் லஞ்சம்' - அமலாக்கத்துறை அதிகாரியை கைது செய்த சிபிஐ; சிக்கியது எப்படி?

ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் அமலாக்கத் துறையின் இணை இயக்குநர் சிந்தன் ரகுவம்சி. இவர் தொழிலதிபர் ஒருவரிடம் லஞ்சம் வாங்க முயன்றபோது சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக வெளியான செய்தியில், சுரங்... மேலும் பார்க்க

புதுச்சேரி: பெண்ணை நிர்வாணமாக்கி தாக்கிய போலீஸ் - தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு பறந்த புகார்

புதுச்சேரி புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் அமைந்திருக்கிறது `லே பாண்டி’ (Le Pondy) நட்சத்திர விடுதி. சில தினங்களுக்கு முன்பு இங்கு தங்கிச் சென்ற கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்களுடைய அறையில் வைத்திரு... மேலும் பார்க்க

வட்டிக்குக் கடன்... பத்திரத்தில் கையெழுத்து போடாத மீனவர் கத்தியால் குத்திக் கொலை - குமரி ஷாக்

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் அலங்காரமாதா தெருவைச் சேர்ந்தவர் ரூபன் கிங்சிலி(36). இவர் கடலில் மீன்பிடித் தொழில் செய்து வந்தார். ரூபன் கிங்சிலி அந்தோணியார் தெருவை சேர்ந்த ஜாண்குமார்(36) என்பவரிடம் பல த... மேலும் பார்க்க

கருவேல மரங்களை வெட்டி விற்றதாகப் புகார்; தேமுதிக மாவட்டச் செயலாளர் மீது வழக்கு; நடந்தது என்ன?

திருச்சி மாவட்டம்,மாத்தூர்கிராமம் சன்னாசிப்பட்டியைச் சேர்ந்த முத்து கருப்பு என்பவரின் மகன் ஆறுமுகம் (வயது 67).இவர் திருச்சிராம்ஜிநகர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில், "மாத்தூர்கிராமத்தில்ச... மேலும் பார்க்க