செய்திகள் :

கமல்ஹாசன் விஸ்வரூபம்! தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு!

post image

கன்னட மொழி விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சிலம்பரசன், ஜார்ஜ் ஜோஜு, அபிராமி, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம், ஜூன் 5 ஆம் தேதியில் வெளியிடப்படவுள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளையும் படக்குழுவினர் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், தமிழ்மொழியில் இருந்துதான் கன்னடம் உருவானது என்று கூறினார்.

அவரின் கருத்துக்கு கர்நாடக அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், கன்னட அமைப்பினரும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தனர்.

மேலும். அவரின் கருத்துக்காக மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தினர். இல்லையெனில், கர்நாடகத்தில் தக் லைஃப் திரையிடப்பட மாட்டாது என்றும் கூறினர்.

இருப்பினும், தனது கருத்துக்காக ஒருபோதும் மன்னிப்பு கோர மாட்டேன் என்று கமல்ஹாசன் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார்.

இந்த நிலையில், கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

மதுரை திமுக பொதுக்குழு கூட்டத்தில் முகக்கவசம் அணிந்துவர அறிவுரை

மதுரையில் நாளை (ஜீன் 1) நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் முகக்கவசம் அணிந்துவர அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. திமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் 50 வயது கடந்த நிர்வாகிகள் தங்களது பாதுகாப்புக்காக முகக்கவ... மேலும் பார்க்க

பொறியியல் கலந்தாய்வு- 2.74 லட்சம் பேர் விண்ணப்பம்

கடந்த 25 நாள்களில் பொறியியல் கலந்தாய்வுக்கு 2.74 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.சனிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 2,12,593 பேர் கட்டணம் செலுத்தியும், 1,77,646 பேர் சான்றிதழ் பதிவேற்றமும் செய்துள்ள... மேலும் பார்க்க

பாஜகவில் இணைந்தார் தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர்

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜகோபாலன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் சனிக்கிழமை அக்கட்சியில் இணைந்தார். இதுகுற... மேலும் பார்க்க

வேலூர்: பச்சிளம் குழந்தை விரல் துண்டிப்பு! அலட்சியம் காட்டிய செவிலியர் மீது வழக்கு

வேலூரில் செவிலியரின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 6 நாள் பச்சிளம் குழ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் முடிவினை கைவிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுக்கான கட்டணத்தை உயர்த்தும் முடிவினை கைவிட வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், அரசுப் போக... மேலும் பார்க்க

மதுரையில் முதல்வரின் சாலைப் பேரணி தொடங்கியது!

மதுரை சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருங்குடி பகுதியில் மாபெரும் சாலைப் பேரணியில் ஈடுபட்டுள்ளார்.திமுக பொதுக் குழு கூட்டம் நாளை( ஜூன் 1) மதுரை உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் நடைபெறவுள்ளது. ஆய... மேலும் பார்க்க