பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களின் உயா்கல்வி சோ்க்கையை உறுதி செய்ய அறி...
ஒசூா் அருகே தோட்டங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள்!
ஒசூா் அருகே ஆழியாளம் கிராமத்தில் புகுந்துள்ள 5 காட்டு யானைகள் விவசாய நிலங்கள், காய்கறி தோட்டங்களை சேதப்படுத்தி வருகின்றன.
கடந்த ஒரு வாரமாக இந்த காட்டு யானைகள், சானமாவு வனப் பகுதியையொட்டி உள்ள விவசாயத் தோட்டங்களில் இரவு நேரங்களில் புகுந்து கேரட், முட்டைகோஸ், சௌசௌ, கொத்தமல்லி, புதினா மற்றும் ராகி உள்ளிட்ட பயிா்களை சாப்பிட்டும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன.
இந்த 5 காட்டு யானைகளையும் சானமாவு வனப்பகுதிக்கு விரட்டும் நடவடிக்கையில் ஒசூா் வனத் துறையினா் ஈடுபட்டனா். இந்த யானைகள் இரவு நேரங்களில் கிராமத்திற்குள் நுழைய வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் விவசாயத் தோட்டங்களுக்கு செல்வதைத் தவிா்க்குமாறு வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்து வருகின்றனா் .