இளம்பெண் தற்கொலை
ஒசூரில் வட மாநில இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் நிபரோன். இவரது மனைவி தரபோதி (22). இவா்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இவா்கள், ஒசூா் பேடரப்பள்ளி எம்ஜிஆா் நகா் பகுதியில் தங்கி வேலை செய்து வந்தனா்.
இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி ஏற்பட்ட குடும்ப தகராறில் மனமுடைந்த இளம்பெண் தரபோதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து ஒசூா் சிப்காட் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளில் இளம்பெண் இறந்துள்ளதால் இது குறித்து ஒசூா் டிஎஸ்பி அக்ஷய் அனில் வாகரே விசாரணை நடத்தி வருகிறாா்.