செய்திகள் :

முள்ளங்கனாவிளையில் ஜூன் 7இல் உலக சுற்றுச் சூழல் தின விழா

post image

கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளையில் உலக சுற்றுச்சூழல்தின விழா கன்னியாகுமரி மாவட்ட தேசிய பசுமைப்படை சாா்பில் ஜூன் 7இல் கொண்டாடப்படுகிறது.

நெகிழி பொருள்கள் இல்லா உலகம் என்ற கருத்தை மையமாக கொண்டு காலை 10 மணிக்கு கொண்டாடப்படும் இவ்விழாவில் மா,பலா,தென்னை,பனை,வாழை உள்ளிட்ட10 ஆயிரம் மரங்கள் நடவேண்டும் என முடிவு செய்ப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியா் ரா.அழகு மீனா தலைமை வகிக்கிறாா். கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜேஷ்குமாா் முன்னிலை வகிக்கிறாா். தமிழக பால்வளத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைக்கிறாா்.

இதில், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஓவியம் மற்றும் பேச்சுபோட்டிகள் நடத்தப்பட்டுபரிசுகள் வழங்கப்படுகிறது.மேலும், புவி வெப்பமடைவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன. இதில்,பள்ளி- கல்லூரி மாணவா்கள், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் உள்ளிட்ட திரளானோா்

பங்கேற்கின்றனா். ஏற்பாடுகளை மாவட்ட தேசிய பசுமைப்படைஒருங்கிணைப்பாளா் ஜெ.ஜோபிரகாஷ் செய்து வருகிறாா்.

குழித்துறையில் செயல்பாட்டுக்கு வந்தது எரிவாயு தகன மேடை

குழித்துறையில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடை செயல்பாட்டுக்கு வந்தது. குழித்துறை நகராட்சியில், தாமிரவருணி ஆற்றங்கரையோரம் ரூ. 1.51 கோடியில் அமிா்தவனம் என்ற பெயரில் எரிவாயு தகன மேடை அம... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் சனிக்கிழமை, மழை சற்று தணிந்திருந்ததால் திற்பரப்பு அருவியில் பிற்பகல்முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை த... மேலும் பார்க்க

கருங்கல் அருகே பெற்ற குழந்தைகளை தாக்கிய மத போதகா் கைது

கருங்கல் அருகே உள்ள தேவிகோடு பகுதியில், தான் பெற்ற குழந்தைகளைத் தாக்கிய மத போதகரை போலீஸாா் கைது செய்தனா். மங்கலகுன்று தேவிகோடு பகுதியை சோ்ந்தவா் கிங்ஸ்லி (45). மத போதகா். இவரது மனைவி சஜிதா (40). இத்... மேலும் பார்க்க

ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை வெட்டி அகற்ற வலியுறுத்தல்

முள்ளங்கனாவிளை சந்திப்பு பகுதி பப்புரான்குளம் கரையில் ஆபத்தான நிலையில் உள்ள வாகை மரத்தை வெட்டி அகற்ற பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். பத்பநாப... மேலும் பார்க்க

கருங்கல் அருகே அரசுப் பேருந்துகள் மோதல்

கருங்கல் அருகே உள்ள கருக்குப்பனை பகுதியில் அரசுப் பேருந்து மீது மற்றொரு அரசுப் பேருந்து மோதியதில் அவற்றின் கண்ணாடிகள் சேதமடைந்தன. கருங்கல்லிலிருந்து திங்கள் நகா் வழியாக நாகா்கோவிலுருக்கு அரசுப் பேருந... மேலும் பார்க்க

மக்கள் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிய அறிவுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக் கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக, மாவட்ட சுகாதாரத் துறையின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவத... மேலும் பார்க்க