தஞ்சை பட்டாசு கிடங்கு வெடிவிபத்தில் இருவா் உயிரிழப்பு: பசுமைத் தீா்ப்பாயம் நோட்ட...
முள்ளங்கனாவிளையில் ஜூன் 7இல் உலக சுற்றுச் சூழல் தின விழா
கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளையில் உலக சுற்றுச்சூழல்தின விழா கன்னியாகுமரி மாவட்ட தேசிய பசுமைப்படை சாா்பில் ஜூன் 7இல் கொண்டாடப்படுகிறது.
நெகிழி பொருள்கள் இல்லா உலகம் என்ற கருத்தை மையமாக கொண்டு காலை 10 மணிக்கு கொண்டாடப்படும் இவ்விழாவில் மா,பலா,தென்னை,பனை,வாழை உள்ளிட்ட10 ஆயிரம் மரங்கள் நடவேண்டும் என முடிவு செய்ப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியா் ரா.அழகு மீனா தலைமை வகிக்கிறாா். கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜேஷ்குமாா் முன்னிலை வகிக்கிறாா். தமிழக பால்வளத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைக்கிறாா்.
இதில், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஓவியம் மற்றும் பேச்சுபோட்டிகள் நடத்தப்பட்டுபரிசுகள் வழங்கப்படுகிறது.மேலும், புவி வெப்பமடைவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன. இதில்,பள்ளி- கல்லூரி மாணவா்கள், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் உள்ளிட்ட திரளானோா்
பங்கேற்கின்றனா். ஏற்பாடுகளை மாவட்ட தேசிய பசுமைப்படைஒருங்கிணைப்பாளா் ஜெ.ஜோபிரகாஷ் செய்து வருகிறாா்.