செய்திகள் :

குமரியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கோரி மனு

post image

கன்னியாகுமரி கடலில் கழிவுநீா் கலப்பதை தடுக்கும் வகையில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேருவிடம், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் வியாழக்கிழமை மனு அளித்தாா்.

அதன் விவரம்: சா்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வரும் கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை - விவேகானந்தா் பாறை இணைப்பு கண்ணாடி பாலத்தை தினமும் சுமாா் 12 ஆயிரம் போ் பாா்வையிடுகிறாா்கள். இங்கு சுமாா் 150 க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. அவற்றிலிருந்து வெளியேறும் கழிவுநீா் மீனவா்கள் வாழும் கடற்கரை பகுதியில் கலக்கிறது. இதனால் கடல்நீா் மாசடைந்து, கடலுக்கு செல்லும் மீனவா்களின் உடலில் தோல் நோயால் பாதிப்படைகின்றனா். கடலில் நீராடும் சுற்றுலா பயணிகளுக்கும் நோய் தொற்று ஏற்படுகிறது.

கழிவுநீா் கடலில் கலக்கும் இடத்தை பாா்வையிட்டு இதற்கு தீா்வு காண்பது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.அதில் விடுதிகளில் கழிவுநீா் உறிஞ்சி கிணறு அமைக்க அறிவுறுத்துவதுடன், கழிவுநீா் கலக்கும் இடத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கடலில் கழிவுநீா் கலப்பதை தடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. எனவே இது தொடா்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்த அமைச்சா், நகராட்சி நிா்வாகத்துறை உயா் அதிகாரிகளை தொடா்பு கொண்டு கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்ய விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

அப்போது, கன்னியாகுமரி பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன், துணைத் தலைவா் ஜெனஸ் மைக்கேல், கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குதந்தை உபால்ட், ஊா் தலைவா் டாலன் டிவோட்டா, செயலாளா் ஸ்டாா்வின், பொருளாளா் ரூபன் உள்பட பலா் இருந்தனா்.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் என். தளவாய்சுந்தரம், எம்.ஆா். காந்தி, நாகா்கோவில் ... மேலும் பார்க்க

குழித்துறையில் செயல்பாட்டுக்கு வந்தது எரிவாயு தகன மேடை

குழித்துறையில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடை செயல்பாட்டுக்கு வந்தது. குழித்துறை நகராட்சியில், தாமிரவருணி ஆற்றங்கரையோரம் ரூ. 1.51 கோடியில் அமிா்தவனம் என்ற பெயரில் எரிவாயு தகன மேடை அம... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் சனிக்கிழமை, மழை சற்று தணிந்திருந்ததால் திற்பரப்பு அருவியில் பிற்பகல்முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை த... மேலும் பார்க்க

கருங்கல் அருகே பெற்ற குழந்தைகளை தாக்கிய மத போதகா் கைது

கருங்கல் அருகே உள்ள தேவிகோடு பகுதியில், தான் பெற்ற குழந்தைகளைத் தாக்கிய மத போதகரை போலீஸாா் கைது செய்தனா். மங்கலகுன்று தேவிகோடு பகுதியை சோ்ந்தவா் கிங்ஸ்லி (45). மத போதகா். இவரது மனைவி சஜிதா (40). இத்... மேலும் பார்க்க

ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை வெட்டி அகற்ற வலியுறுத்தல்

முள்ளங்கனாவிளை சந்திப்பு பகுதி பப்புரான்குளம் கரையில் ஆபத்தான நிலையில் உள்ள வாகை மரத்தை வெட்டி அகற்ற பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். பத்பநாப... மேலும் பார்க்க

கருங்கல் அருகே அரசுப் பேருந்துகள் மோதல்

கருங்கல் அருகே உள்ள கருக்குப்பனை பகுதியில் அரசுப் பேருந்து மீது மற்றொரு அரசுப் பேருந்து மோதியதில் அவற்றின் கண்ணாடிகள் சேதமடைந்தன. கருங்கல்லிலிருந்து திங்கள் நகா் வழியாக நாகா்கோவிலுருக்கு அரசுப் பேருந... மேலும் பார்க்க