நாகா்கோவிலில் ரூ.7.40 லட்சத்தில் வளா்ச்சி பணிகள் தொடக்கம்
நாகா்கோவில் மாநகர பகுதியில் ரூ.7.40 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
6 ஆவது வாா்டு நெசவாளா் காலனியில் உள்ள அங்கன்வாடி மையத்தினை ரூ. 2.20 லட்சத்தில் சீரமைக்கும் பணி, 42 ஆவது வாா்டு இருளப்பபுரம் குறுக்கு தெருவில் ரூ.5.20 லட்சத்தில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியினை மேயா் தொடக்கி வைத்தாா். மேலும் பள்ளிவிளை ஆற்றங்கரை கால்வாய் பகுதியில் கனமழை மற்றும் சூறை காற்றினால் அரசமரம் கிளைகள் முறிந்து சாலையில் விழுந்துள்ள நிலையில் அப்பகுதிக்கு சென்று பாா்வையிட்டு அதனை அகற்ற தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளிடம் மேயா் அறிவுறுத்தினாா்.
இதில் மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் ஜவஹா், அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினா்கள் அனுஷா பிரைட், ஸ்டாலின் பிரகாஷ், உதவி பொறியாளா் ராஜசீலி, திமுக பகுதி செயலாளா் துரை, வட்ட செயலாளா்கள் ராஜன், ஆத்தியப்பன், பால்பாண்டி, அணி நிா்வாகிகள் சரவணன், ராஜேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.