செய்திகள் :

``காசாவின் ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு; தோல்வி முகத்தில் ஹமாஸ்..'' - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேச்சு

post image

2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - காசா போர் இன்று வரை தொடர்ந்துகொண்டு இருக்கிறது.

இதுவரை இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நடந்த மோதல்களைப் பொறுத்தவரை, பெரும்பாலும் இஸ்ரேல் தான் முதலில் தாக்குதலைத் தொடங்கும். ஆனால், இந்தப் போரின் தொடக்கத்திற்கு காரணம், காசா. ஆம், இந்தப் போரில் முதல் தாக்குதலை மேற்கொண்டது காசா தான். இந்தத் தாக்குதலுக்கு பின்னால், முக்கிய மூளையாக செயல்பட்டவர் யஹ்யா சின்வார்.

ஹமாஸ் காசா தலைவர் முஹம்மது சின்வார்
ஹமாஸ் காசா தலைவர் முஹம்மது சின்வார்

இவர் தான் ஒட்டுமொத்த ஹமாஸ் அமைப்பின் அப்போதைய தலைவர். ஆனால், இவர் அதே ஆண்டு அதே மாதம் (2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம்) இஸ்ரேலால் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தார். இவருக்கு பின்னால், இவரது சகோதரர் முஹம்மது சின்வார், ஹமாஸ் அமைப்பின் காசா தலைவரானார்.

இப்போது அவரும் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார். இதற்கு முன்பே, இந்தச் செய்தி கசிந்திருந்தாலும், அது உறுதிப்படுத்தப்படவில்லை.

நேற்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நெதன்யாகு, இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த ஹமாஸ் தலைவர்களின் பட்டியலை வாசித்தார். அதில் தான் முஹம்மது சின்வார் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆக, அவர் உயிரிழந்தது இஸ்ரேல் பிரதமரால் உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால், ஹமாஸ் அமைப்பு இன்னும் உறுதி செய்யவில்லை.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

"கடந்த இரண்டு தினங்களாக, ஹமாஸ் தோல்வி முகத்திற்கு திரும்பி உள்ளது" என்று நேற்று நெதன்யாகு பேசியுள்ளார். மேலும், பாலஸ்தீனத்தில் உணவு சப்ளையை இஸ்ரேல் கையிலெடுத்துள்ளதாகவும் அறிவித்தார்.

கடந்த சில தினங்களாக, பாலஸ்தீனத்தில் மக்கள் பசியால் பாதித்து வருகிறார்கள் என்று உலக நாடுகள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

``குடும்ப அரசியல் என்று எதிர்த்தீர்களே? இப்போது..'' - செய்தியாளர் கேள்விக்கு கமலின் ரியாக்ஷன் என்ன?

மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கமல்ஹாசன் தமிழக முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்துப் பேசியிருக்கிறார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கமல்ஹாசன், "முதல்வரை சந்தித்து நன்றி... மேலும் பார்க்க

``பாகிஸ்தானின் 81% ராணுவ தளவாடங்கள் சீனா உடையது தான்!'' - சசி தரூர் குற்றச்சாட்டு

ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்க, இந்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக்களை அமைத்துள்ளது. அந்தக் குழுக்கள் இப்போது வெளிநாட்டில் பயணம் மேற்கொண்டு வருகின்றன. அதில் நேற்று சசி தரூர் கொலம்பியாவிற்க... மேலும் பார்க்க

`கீழடி ஆய்வறிக்கையை திருப்பி அனுப்பிய இந்திய தொல்லியல் துறை' - கிளம்பிய சர்ச்சையும், விளக்கமும்!

அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடி குறித்த தனது ஆய்வறிக்கையை இந்திய தொல்லியல் துறைக்கு 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் சமர்ப்பித்திருந்தார். இந்த அறிக்கையில் சில மாற்றங்களைச் செய்யுமாறு கடந்த வாரம் திருப்பி அனுப்ப... மேலும் பார்க்க

US Tariffs: `இறக்குமதி வரி ரத்து-க்கு தற்காலிக தடை!' - நீதிமன்ற தீர்ப்பு ட்ரம்ப்-க்கு வெற்றியா?

கடந்த ஏப்ரல் 2-ம் தேதி, பெரும்பாலான உலக நாடுகளுக்கு 'பரஸ்பர வரி'யை விதித்து உத்தரவிட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அந்த நாளுக்கு 'விடுதலை நாள்' என்றும் பெயர் வைத்தார். 'பிற உலக நாடுகள் அமெரிக்காவின் ம... மேலும் பார்க்க

USA: `சீன மாணவர்களுக்கு ஸ்பெஷல் கண்டிஷன்' - வெளிநாட்டு மாணவர்களுக்கு ட்ரம்ப் வைக்கும் செக்!

அமெரிக்காவில் படிப்பு... அமெரிக்காவில் வேலை என்பது இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான உலக நாடுகளில் உள்ள இளைஞர்களின் கனவு. ஆனால், இனி அது அவ்வளவு எளிதாக இருக்காது. இதற்கு காரணம், 'அமெரிக்க அதிபர் ட்ரம்ப்'.அ... மேலும் பார்க்க

`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா பரபரப்பு புகார்!

தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சிக்குள் சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ந்து சலசலப்பு எழுந்து கொண்டே இருக்கிறது. கடந்த வாரம், 'நான் என்னுடைய தந்தைக்கு எழுதிய கடிதம... மேலும் பார்க்க