செய்திகள் :

டிரம்ப் அரசின் முக்கிய மசோதாவுக்கு மஸ்க் எதிர்ப்பு!

post image

அமெரிக்க அரசு கொண்டுவந்த புதிய மசோதாவுக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த மசோதாவை விமர்சித்த 24 மணிநேரத்தில், அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை(டிஓஜிஇ) தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மஸ்க் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் செனட் அவையில் ’பிக் பியூட்டிஃபுல்’ (Big Beautiful Bill ) என்ற மசோதா சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகின்றது.

இந்த மசோதா பல்வேறு பொருளாதார செலவீனங்களை மாற்றி அமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதரவை திரட்டும் வகையில் நாடு முழுவதும் அதிபர் டிரம்ப் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், மசோதாவில் ட்ரில்லியன் டாலர் வரிச்சலுகை என்பது பட்ஜெட் பற்றாக்குறையை அதிகரிக்கும் என்றும் எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அமெரிக்க ஊடகத்தில் வெளியான மஸ்க்கின் நேர்க்காணலில், மசோதா குறித்து அவர் பேசியதாவது:

”இதனை அழகான மசோதா என்று அழைப்பது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த மசோதாவில் வரி குறைப்புக்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட குடியேற்ற அமலாக்கம் இருக்கின்றன.

அரசின் பற்றாக்குறையை அதிகரிக்கும் வகையிலும், அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறையின் பணியை குறைமதிப்பீடு செய்யும் வகையிலும் அமைகிறது.

இந்த மசோதா பெரிதாகவோ அல்லது அழகாகவோ இருக்கலாம், ஆனால் இரண்டும் சேர்ந்து இருக்குமா எனத் தெரியவில்லை” எனக் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறைக்கு தலைவராக பதவி வகிக்க திட்டமிடப்பட்ட நேரம் நிறைவடைந்துவிட்டதாக மஸ்க் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகினார் எலான் மஸ்க்!

பெருவெள்ளத்தில் மூழ்கிய நைஜீரிய நகரம்! 88 பேரது உடல்கள் மீட்பு!

நைஜீரியா நாட்டின் முக்கிய சந்தை நகரத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் 88 பேர் பலியாகியுள்ளனர். நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தின் மோக்வா எனும் சந்தை நகரத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் அங்குள்ள ஏராளமான ... மேலும் பார்க்க

மங்கோலியாவில் 4,000-ஐ கடந்த தட்டம்மை பாதிப்புகள்!

மங்கோலியாவில் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை 4,000-ஐ கடந்துள்ளது. கிழக்கு ஆசிய நாடான மங்கோலியாவில் தட்டம்மை நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சமீப நாள்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. பெ... மேலும் பார்க்க

இந்தோனேசியா கல் குவாரியில் பாறைகள் சரிந்து 8 பேர் பலி! தேடுதல் பணி தீவிரம்!

இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளில் செயல்பட்டு வந்த சுண்ணாம்பு கல் குவாரியில் பாறைகள் சரிந்ததில் 8 பேர் பலியாகியுள்ளனர். மேற்கு ஜாவா மாகாணத்தின் சிரேபன் நகரத்தில் செயல்பட்டு வந்த சுண்ணாம்பு கல் குவாரியில்,... மேலும் பார்க்க

கனமழையில் திணறும் வடமேற்கு பாகிஸ்தான்! 8 பேர் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பெய்து வரும் இடியுடன் கூடிய கனமழையால் 8 பேர் பலியாகியுள்ளனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தில் கடந்த மே 27 ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகின்றது. இடி மற்றும் ப... மேலும் பார்க்க

18.4 கோடி கூகுள், ஆப்பிள், முகநூல் பயனர்களின் கடவுச்சொற்கள் கசிவு!

கூகுள், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களைப் பயன்படுத்துவோரின் கடவுச்சொற்கள் கசிந்ததாக தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், சமூக ஊடகங்களின் கடவுச்சொற்கள் மு... மேலும் பார்க்க

எலான் மஸ்க்கின் கடைசி வேலை நாள்: டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை(டிஓஜிஇ) தலைவராக எலான் மஸ்க்கின் கடைசி வேலை நாள் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போ... மேலும் பார்க்க