செய்திகள் :

ஊட்டி: தலையில் முறிந்து விழுந்த மரம்; பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்.. சோகத்தில் முடிந்த சுற்றுலா

post image

நீலகிரி மாவட்டத்தில் இன்றும் நாளையும் மிதமிஞ்சிய அளவில் மழைப்பொழிவு இருக்கும் என ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பரவலாக நேற்று காலை முதல் தற்போது வரை பலத்த காற்றுடன் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது .

பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு மற்றும் மீட்பு குழு வீரர்கள், வருவாய்த்துறையினர் என ஒட்டுமொத்த அரசுத்துறைகளும் களத்தில் நின்று முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொட்டபெட்டா காட்சி முனை, ஊட்டி படகு இல்லம், பைக்காரா, ஷூட்டிங் மட்டம், அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களும் மூடப்பட்டுள்ளன. ஆபத்தான பகுதிகளில் மக்கள் யாரும் நடமாட வேண்டாம் எனவும் சுற்றுலா பயணிகள் மாலை 4 மணிக்குள் தங்கும் விடுதிகளுக்கு திரும்புமாறு மாவட்ட நிர்வாகம் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

சாலையில் முறிந்து விழுந்த மரம்

இந்த நிலையில், ஷூட்டிங் மட்டம் அருகில் உள்ள 8 - வது மைல் பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் சுற்றுலா சென்ற கேரளாவைச் சேர்ந்த 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். சுற்றுலா சென்ற இடத்தில் ஏற்பட்ட இந்த உயிரிழப்பு சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து தெரிவித்த காவல்துறையினர், " கேரள மாநிலம் கேலிகட் பகுதியில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்த குடும்பத்தினர் இன்று காலை 8 - வது மயில் பகுதிக்கு சென்றிருக்கிறார்கள். பலத்த காற்று மற்றும் மழையின் காரணமாக திடீரென மரம் ஒன்று முறிந்து 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஆதி தேவ் மீது விழுந்துள்ளது.

சிறுவன் உயிரிழப்பு

பலத்த காயம் ஏற்பட்ட சிறுவனை ஊட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், இந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மரங்கள் அடர்ந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், எதையும் பொருட்படுத்தாமல்‌ பலரும் நடமாடி வருகின்றனர். அவசிய தேவைகளைத் தவிர வெளியில் நடமாடுவதை இன்றும் நாளையும் மக்கள் தவிர்க்க வேண்டும்" என்றனர்.

கொச்சி: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்; மிதக்கும் கண்டெய்னர்கள்.. - பேரிடர் மேலாண்மைக்குழு எச்சரிக்கை

லைபீரியா நாட்டைச் சேர்ந்த எம்.எஸ்.சி எல்சா-3 என்ற சரக்கு கப்பல் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞம் அதானி துறைமுகத்தில் இருந்து கடந்த 23-ம் தேதி கொச்சி துறைமுகத்துக்கு புறப்பட்டுச் சென்றது.... மேலும் பார்க்க

மரத்தடியில் உறங்கிய வியாபாரி; சாக்கடை கழிவை கொட்டிய மாநகராட்சி ஊழியர்கள்... உயிரிழந்த சோகம்

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்தவர் சுனில் குமார்(45). இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார்.இவர் கடுமையான வெயில் காரணமாக அங்கு சாலையோரம் இருந்த மரத்திற்கு அடியில் ஓய்வெடுக்க படுத்தார். அப்... மேலும் பார்க்க

ஓடும் பேருந்தில் நெஞ்சு வலி; ஸ்டியரிங்கில் சாய்ந்த ஓட்டுநர்; நொடிகளில் பயணிகளை காப்பாற்றிய நடத்துனர்

ஓடிக்கொண்டிருந்த தனியார் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட, சாதுரியமாகச் செயல்பட்டு கையால் பிரேக் பிடித்து பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய நடத்துனரின் செயல், கவனம் பெற்றிருக்கிறது.சம்பவம் ந... மேலும் பார்க்க

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி விபத்தில் பலி - ஊட்டி மலைப்பாதையில் கோரம்

மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் திவ்ய பிரியா (29). இவர், அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின், மகள் வழி பேத்தி ஆவார். திவ்யாவுக்கு திருமணமாகி கார்த்திக் (வயது 30) என்கிற கணவர் உள்ளா... மேலும் பார்க்க

தெலங்கானா: பிறந்த குழந்தை மீது போதையில் படுத்த தந்தை; பதறிப்போன தாய்; குழந்தைக்கு நேர்ந்த சோகம்

தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள கானாபூர் அருகில் உள்ள சீமல்பல்லி என்ற இடத்தில் வசிப்பவர் சேகர்(22). கூலித்தொழிலாளியான சேகர் மனைவி சுஜாதாவிற்குக் கடந்த 28 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தி... மேலும் பார்க்க

`சாலையில் 20 அடி குழி; விழுந்து தம்பதி உயிரிழப்பு' - ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்துள்ள சேர்வைக்காரன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் (42). பழவஞ்சிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். நாகராஜ் மனைவி ஆன... மேலும் பார்க்க