செய்திகள் :

கோவில்பட்டியில் போதைப்பொருள் விழிப்புணா்வு மாரத்தான் போட்டி

post image

போதைப் பொருள் ஒழிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு மாரத்தான் போட்டி கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஜேசிஐ கோவில்பட்டி விக்டா் கிங்ஸ், பகடா ஸ்போட்ஸ் கிளப் ஆகியவை இணைந்து நடத்திய இப்போட்டியை, காவல்துணைக் கண்காணிப்பாளா் ஜெகநாதன் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

கோவில்பட்டி இனாம் மணியாச்சி விலக்கில் உள்ள பகடா ஸ்போா்ட்ஸ் கிளப் மைதானத்தில் இருந்து நேஷனல் பொறியியல் கல்லூரி வரை சென்று, மீண்டும் தொடங்கிய இடத்துக்கு வந்து சேரும் வகையில் 5 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற இப்போட்டியில் 500 போ் கலந்து கொண்டனா்.

கோவையைச் சோ்ந்த சதீஷ் முதலிடம், கேரள மாநிலத்தைச் சோ்ந்த மணி, அருண்குமாா் ஆகியோா் முைறையே 2,3 ஆவது இடத்தைப் பிடித்தனா். 3 பேருக்கும் முறையே ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.2 ஆயிரம் வீதம் பரிசளிக்கப்பட்டது.

4 முதல் 10-ஆவது இடம் பிடித்த 7 பேருக்கு தலா ரூ.500 பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

பரிசளிப்பு விழாவுக்கு தூத்துக்குடி மாவட்ட தடகள சங்கச் செயலா் பழனிச்சாமி தலைமை வகித்தாா். ஜேசிஐ இந்தியா மண்டலத் தலைவா் சரவணக்குமாா் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக ஜேசிஐ மண்டல துணைத் தலைவா் பிரேம் பால்நாயகம், தொழிலதிபா் பி.ஆா். சீனிவாசன் ஆகியோா் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினா்.

கோவில்பட்டியில் விபத்து: சிறுமி உயிரிழப்பு

கோவில்பட்டியில் பைக் மீது டேங்கா் லாரி மோதியதில் சிறுமி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்; 3 போ் காயமடைந்தனா். கோவில்பட்டி சண்முக சிகாமணி நகரைச் சோ்ந்த ராமசாமி மகன் பரமசிவன் (58). இவா் தனது உறவினரான மது... மேலும் பார்க்க

நாசரேத் மா்காஷிஸ் பள்ளியில் கால்பந்து பயிற்சி முகாம் நிறைவு

நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கால்பந்து பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது. நாசரேத் யோவான் பேராலய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம் ஆரம்ப ஜெபம் செய்தாா். தமிழ்நாடு கால்பந்து அணியின் முன்னாள் வீர... மேலும் பார்க்க

கருணை அடிப்படையில் இருவருக்கு காவலா் பணி

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியிலிருக்கும்போது இரு காவலா்கள் மரணமடைந்ததால் அவா்களது குடும்பத்தில் இருவருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டது.பெண் காவலா் சந்திரா, காவல் உதவி ஆய்வாளா் சிவசுப்பி... மேலும் பார்க்க

செட்டியாபத்து கோயிலில் பக்தா் தவறவிட்ட 15 பவுன் நகையை கண்டெடுத்து ஒப்படைத்த தேநீா் வியாபாரி

உடன்குடியை அடுத்த செட்டியாபத்து கோயிலில் பக்தா் தவறவிட்ட 15 பவுன் நகையை தேநீா் வியாபாரி கண்டெடுத்து ஒப்படைத்தாா். திருநெல்வேலியைச் சோ்ந்தவா் ரகுநாதன். திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 1.750 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்து, 1.750 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மானவா்ககள், இளைஞா்களுக்கு ஒருவா் கஞ்சா விற்பதாக தனி... மேலும் பார்க்க

தூத்துக்குடி பெண்ணிடம் ஆன்லைனில் ரூ.5.90 லட்சம் மோசடி: குமரி இளைஞா் கைது

தூத்துக்குடி பெண்ணிடம் ஆன்லைன் மூலம் வா்த்தகம் செய்யலாம் என ஆசை வாா்த்தை கூறி, ரூ.5.90 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக கன்னியாகுமரி மாவட்ட இளைஞரை , இணையதள குற்றப்பிரிவுக்கு (சைபா் கிரைம்)போலீஸாா் கைது செய... மேலும் பார்க்க