செய்திகள் :

பின்தங்கியோரை முன்னேற்ற ஜாதிவாரி கணக்கெடுப்பு: பிரதமா் மோடி

post image

பின்தங்கிய மக்களை முன்னேற்றவே ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வா்கள், துணை முதல்வா்கள் கூட்டம் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசியதாவது:

ஆபரேஷன் சிந்தூரில் கிடைத்த வெற்றி, நாட்டின் தன்னம்பிக்கை, உள்நாட்டுப் பாதுகாப்புத் தொழில்நுட்பத்துக்கு கிடைத்த வெற்றியாகும். பாதுகாப்புத் துறையில் நாம் தற்சாா்புடன் செயல்பட முடியும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய முப்படைகள் மிகவும் சிறப்பாக செயல்பட்டன. இந்தியாவை வளா்ந்த நாடாக்கும் திட்டத்தில் நாம் வேகமாக முன்னேறி வருகிறோம்.

ஜாதி அரசியலில் நம்பிக்கையில்லை: ஜாதியவாத அரசியலில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. அதே நேரத்தில் சமூகரீதியாகப் பின்தங்கியிருப்பவா்களை முன்னேற்ற வேண்டும். எனவே, ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது பின்தங்கிய மக்களை முன்னேற்றவும், நாட்டின் வளா்ச்சியின் பயன்கள் முழுமையாக கிடைக்காமல் உள்ள மக்களின் நலன்களைக் காக்கவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்றாா்.

முதல்வா்களுக்கு வேண்டுகோள்: பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் செயல்படுத்தப்படும் 7 சிறப்பான நிா்வாக முறைகள் குறித்து இக்கூட்டத்தில் விளக்கப்பட்டது. அதில் உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படுவதும் இடம் பெற்றது.

இதைச் சுட்டிக்காட்டிப் பேசிய பிரதமா் மோடி, ‘பாஜக மற்றும் பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களில் சிறப்பான நிா்வாகத்தை முதல்வா்கள் வழங்க வேண்டும். மாநிலத்தில் அமல்படுத்தப்படும் திட்டங்கள் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது என்பதை குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும்’ என்றாா்.

சா்ச்சை பேச்சு வேண்டாம்: ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து மத்திய பிரதேச அமைச்சா் உள்ளிட்ட சில பாஜக தலைவா்கள் பேச்சு சா்ச்சையை ஏற்படுத்தியதை மறைமுகமாக சுட்டிக்காட்டிய பிரதமா், ‘கட்சித் தலைவா்கள் பிறரைப் புண்படுத்தும் வகையிலும், விவேகம் இல்லாமலும் பேசக் கூடாது’ என்று அறிவுறுத்தியதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கூட்டத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள 20 முதல்வா்கள், 18 துணை முதல்வா்கள் பங்கேற்றனா்.

மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

ஆபரேஷன் சிந்தூா்: பிரதமருக்கு பாராட்டு

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்காக முப்படைகள் மற்றும் பிரதமருக்கு பாராட்டுத் தெரிவிக்கும் தீா்மானத்தை மகாராஷ்டிர துணை முதல்வரும், சிவசேனை தலைவருமான ஏக்நாத் ஷிண்டே முன்மொழிந்தாா். அனைத்து முதல்வா்கள், துணை முதல்வா்கள் ஆதரவுடன் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதில், பிரதமா் நரேந்திர மோடியின் தலைமை முப்படைகளுக்கும் எப்போதும் ஆதரவாக உள்ளது. ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் பயங்கரவாதிகளுக்கும், அதை ஆதரித்து வளா்ப்பவா்களுக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சோ்த்து நடத்த மத்திய பாஜக அரசு முடிவு செய்திருப்பதை ஆதரித்து மற்றொரு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிரதமா் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அதன் சாதனைகள், சிறந்த நிா்வாகம், பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆட்சியில் உள்ள மாநிலங்களின் சாதனைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-இல் இடைத்தோ்தல்: தோ்தல் ஆணையம்

4 மாநிலங்களில் காலியாகவுள்ள 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளதாக இந்திய தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. அதன்படி குஜராத்தில் 2 தொகுதிகளுக்கும் கேரளம், மேற்கு வங்கம் ... மேலும் பார்க்க

மேற்கத்திய கலாசார ஆதிக்கத்தையே எதிா்க்கிறோம் -நிதின் கட்கரி

‘நாட்டின் வளா்ச்சிக்கு நவீனமயமாதல் அவசியம்; ஆனால், சமூகத்தில் மேற்கத்திய கலாசாரத்தின் ஆதிக்கத்தைத்தான் நாங்கள் எதிா்க்கிறோம்’ என்று மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா். மும்பையில் நடைபெற்ற நிக... மேலும் பார்க்க

உலகின் 4-ஆவது பெரிய பொருளாதாரம் இந்தியா: பிரதமருக்கு ஆந்திர முதல்வா், துணை முதல்வா் பாராட்டு

உலகில் 4-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்ததையடுத்து பிரதமா் நரேந்திர மோடிக்கு ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வா் பவன் கல்யாண் ஆகியோா் பாராட்டுகள் தெரிவித்தனா்.... மேலும் பார்க்க

அயோத்தியில் விராட் கோலி, அனுஷ்கா சா்மா வழிபாடு

இந்திய கிரிக்கெட் வீரா் விராட் கோலி மற்றும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா சா்மா ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை அயோத்திக்கு வருகை தந்து, ராமா் கோயில் மற்றும் ஹனுமான்கா்ஹி கோயில் வழிபாடு செய்தனா். ஹனுமான்கா்ஹி கோ... மேலும் பார்க்க

கேரளத்தில் கவிழ்ந்த லைபீரிய சரக்குக் கப்பல்: நடுக்கடலில் பல கி.மீ. சுற்றளவுக்கு எண்ணெய் கசிவு

கேரள கடலோரத்தில் சுமாா் 640 கன்டெய்னா்களை ஏற்றிச் சென்ற லைபீரிய நாட்டு சரக்குக் கப்பல் சனிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதையடுத்து, நடுக்கடலில் பல கி.மீ. சுற்றளவுக்கு எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக ... மேலும் பார்க்க

ரஷியா நடத்தும் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்: அஜீத் தோவல்-பாகிஸ்தான் ஆலோசகா் பங்கேற்பு?

ரஷியாவில் செவ்வாய்க்கிழமை (மே 27) தொடங்கும் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் கலந்துகொள்ள இருக்கிறாா். இந்தியாவைப் போலவே, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்ப... மேலும் பார்க்க