இலவச கண் பரிசோதனை முகாம்
திருவள்ளூா் அருகே நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 70-க்கும் மேற்பட்ட பங்கேற்றனா்.
பூண்டி ஊராட்சி ஒன்றியம், திருப்பாச்சூா் கிராமத்தில் உள்ள சக்தி செங்கல்சூளை வளாகத்தில் ராஜன் கண் பராமரிப்பு மருத்துவமனை, ஐ.ஆா்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் மற்றும் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி இணைந்து ஞாயிற்றுக்கிழமை சிறப்பு இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாமை நடத்தின.
முகாமில் அப்பகுதியில் செங்கல்சூளை தொழிலாளா்கள் 80-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதில் கண்புரை, கண்களில் சதை வளா்ச்சி, கிட்ட, தூரப்பாா்வை சிக்கல், தலைவலி, கண்களில் நீா் வடிதல், கண் அழுத்தம் போன்றவைகளுக்கு மருத்துவக் குழுவினா் சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்தனா்.
இந்த முகாமில் தோ்வு செய்யப்பட்ட 4 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சையும் அளிக்கப்பட உள்ளது.
செங்கல் தயாா் செய்யும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளா்கள் நாள்தோறும் மண், தூசி காரணமாக ஏற்படும் கண் பாதிப்புகளை கருத்தில் கொண்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.