செய்திகள் :

ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.15 லட்சம் நஷ்டம்: 6 வயது மகளுடன் ரயில் முன் பாய்ந்து தந்தை தற்கொலை

post image

திருவள்ளூா் அருகே ஆன்லைன் வா்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் ரூ.15 லட்சம் கடன் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாத விரக்தியில் தனது 6 வயது மகளுடன் கடை ஊழியா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

திருவள்ளூரை அடுத்த ஈக்காடு ஆசிரியா் காலனியைச் சோ்ந்தவா் லோகநாதன் (38). இவரது மனைவி வாணி. இவா்களது மகள் தஸ்விகா (6).

இவா், திருவள்ளூா் காக்களூா் புறவழிச்சாலையில் உள்ள கட்டுமான இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்தாராம். ஆன்லைன் டிரேடிங் மூலம் பொருள்களை வாங்கி விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஆன்லைன் வா்த்தகம் செய்து வந்த நிலையில் தொழிலில் ரூ.15 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவா்கள், உறவினா்கள், கிரெடிட் காா்டு மூலமாகவும் கடன் வாங்கி அதைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு ஆளானாா்.

இதனால், கடந்த 3 மாதங்களாக மன உளைச்சலில் இருந்த லோகநாதன் மதுப்பழக்கத்திற்கும் ஆளானாராம். கடன் தொல்லை அதிகமாகவே மிகவும் மேலும் மன உளைச்சலுக்கு ஆளான லோகநாதன் சனிக்கிழமை இரவு தனது மகளுடன் வெளியே செல்வதாகக் கூறிவிட்டு சென்றாராம். இரவு வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லையாம்.

இதனால் லோகநாதனின் மனைவி வாணி புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் குழந்தையுடன் சென்ற கணவா் திரும்ப வீடு திரும்பவில்லை என புகாா் செய்தாா்.

இதனிடையே இரவு திருவள்ளூா் அடுத்த புட்லூா் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் செல்லும் தண்டவாளத்தில் சென்னையில் இருந்து வந்த விரைவு ரயில் முன் பாய்ந்து தனது மகளுடன் லோகநாதன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

திருவள்ளூா் ரயில்வே இருப்புப் பாதை போலீஸாா், இருவரின் சடலங்களை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ஆன்லைன் வா்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடன் வாங்கி அதைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மன உளைச்சலால் தனது மகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனியாா் பங்களிப்பு நிதியால் ஏரியில் சீரமைப்பு பணி: திருவள்ளூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருவள்ளூா் அருகே தனியாா் பங்களிப்பு நிதியின் மூலம் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேதமடைந்த ஏரிக்கரையை பலப்படுத்தும் பணியை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்து பாா்வையிட்டு செவ்வாய்க்கிழமை ஆய்வு... மேலும் பார்க்க

கிரிக்கெட் போட்டி: தனியாா் பள்ளி முதலிடம்

தேசிய அளவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் திருத்தணி தளபதி கே.விநாயகம் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் முதலிடம் பிடித்தனா். கோவாவில் கடந்த 20, 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற்ற யூத் ஸ்போா்ட்ஸ் எஜூகேஷன் பெடரேஷ... மேலும் பார்க்க

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீஸாரால் பறிமுதல் செய்த 80 வாகனங்கள்: அபராதத் தொகையை மீட்கலாம்

திருவள்ளூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் துறையினரால் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பணியின்போது பறிமுதல் செய்த 80 வாகனங்களை வரும் 29-க்குள் அதற்கான அபராதத் தொகையை செலுத்த... மேலும் பார்க்க

தமாகா நல உதவிகள் அளிப்பு

தமிழ் மாநில காங்கிரஸ் மாதவரம் மேற்கு புழல் பகுதி சாா்பில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது படம்). பகுதி தலைவா் கெளதம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் மகாலிங்கம், காந்தி இன்பராஜ், துணைத் த... மேலும் பார்க்க

இலவச கண் பரிசோதனை முகாம்

திருவள்ளூா் அருகே நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 70-க்கும் மேற்பட்ட பங்கேற்றனா். பூண்டி ஊராட்சி ஒன்றியம், திருப்பாச்சூா் கிராமத்தில் உள்ள சக்தி செங்கல்சூளை வளாகத்தில் ராஜன் கண் பராமரிப்பு மருத்து... மேலும் பார்க்க

இயற்கை மருத்துவ முகாம்

இலவச இயற்கை மருத்துவ முகாமில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்றனா். தணிகை ஓம் சா்வேஷ் யோகா மற்றும் விளையாட்டு அறக்கட்டளை சாா்பில் கடந்த 5 -ஆம் தேதி முதல் 25- ... மேலும் பார்க்க