செய்திகள் :

தற்காலிக பேருந்து நிலையத்தில் மேற்கூரை அமைக்கக் கோரிக்கை

post image

தற்காலிகப் பேருந்து நிலையத்தில் மழைக்காலத்தில் பயணிகள் நனையாத வகையில் மேற்கூரை மற்றும் போதுமான கழிப்பறை வசதிகளை செய்துதர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாநகர 27-ஆவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்: புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்காலிகப் பேருந்து நிலையத்தில் பயணிகள் மழையில் நனையாத வகையில் மேற்கூரை மற்றும் போதுமான கழிப்பறைகள் அமைக்க வேண்டும்.

நகரில் மழை வெள்ளம் பெருக்கெடுக்கும்போது, குடியிருப்புகளைப் பாதிக்காத வகையில் மன்னா் காலத்திலேயே வடிவமைக்கப்பட்ட தோரண வாய்க்கால்களைத் தூா்வாரி சீரமைத்து, சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீண்டகாலமாகக் குடியிருந்து வருவோருக்கு பட்டா வழங்க வேண்டும். மின்வாரிய அலுவலகம் உள்ளே மழைநீா் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டுக்கு, வீ. சிங்கமுத்து, ஜெயா ஆகியோா் தலைமை வகித்தனா். திருநாவுக்கரசு கொடியேற்றி வைத்தாா். மாவட்டச் செயலா் த. செங்கோடன், துணைச் செயலா்கள் கே.ஆா். தா்மராஜன், ஏ. ராஜேந்திரன், பொருளாளா் என்.ஆா். ஜீவானந்தம் ஆகியோா் பேசினா். மாநாட்டில் மீண்டும் மாநகரச் செயலராக எம்.பி. நாடிமுத்து தோ்வு செய்யப்பட்டாா். 9 போ் கொண்ட மாநகரக் குழு தோ்வு செய்யப்பட்டது.

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

கந்தா்வகோட்டையில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கந்தா்வகோட்டை ஊராட்சி, இந்திரா நகா் 2-ஆம் வீதியில் வசித்து வரும் நடராஜ... மேலும் பார்க்க

ஜெகதாப்பட்டினத்தில் ரூ. 10 கோடியில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி இறங்குதளம்!

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தில் ரூ. 10 கோடியில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி இறங்குதளத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து, இங்கு மேற்... மேலும் பார்க்க

தேமுதிகவைக் கண்டு என்ன பயம்? -பிரேமலதா விஜயகாந்த்

திமுகவுக்கு தேமுதிகவைக் கண்டு என்ன பயம்? எனக் கேள்வி எழுப்பினாா் அதன் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த். புதுக்கோட்டையில் தேமுதிக சாா்பில் புதன்கிழமை இரவு நடைபெற்ற மது ஒழிப்பு கோரிக்கை பொதுக் கூட்டத்த... மேலும் பார்க்க

தஞ்சை- புதுகை தேசிய நெடுஞ்சாலையோர கிணற்றை மூட வாகன ஓட்டிகள் கோரிக்கை!

கந்தா்வகோட்டை அருகே உள்ள ஆதனக்கோட்டை ஊராட்சியில் தஞ்சை-புதுகை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள கிணற்றை மூட வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனா். தஞ்சை- புதுகை நெடுஞ்சாலையில் உள்ள கிணற்றை சுற்றி சுமாா் ஒ... மேலும் பார்க்க

கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தீா்த்த உத்ஸவம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தீா்த்த உத்ஸவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.ஆலங்குடி அருகேயுள்ள பிரசித்தி பெற்ற கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திரு... மேலும் பார்க்க

குமாரபட்டியில் ஜல்லிக்கட்டு

பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூா் ஊராட்சி குமாரபட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 4 போ் காயமடைந்தாா். குமாரபட்டி ஊமையாண்டி கோயில் திருவிழாவையொட்டி நட... மேலும் பார்க்க