ஸ்ரீவைகுண்டம்: 108 திவ்ய தேசம், நவதிருப்பதிகளில் சூரியன் தலமான கள்ளபிரான் திருக்...
ரயிலில் தூக்கிட்ட நிலையில் முதியவரின் சடலம் மீட்பு
விழுப்புரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் தூக்கிட்ட நிலையில் கிடந்த முதியவரின் சடலம் புதன்கிழமை காலை மீட்கப்பட்டது.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருப்புப் பாதை காவல் துறையினா் புதன்கிழமை காலை ரோந்து சென்றனா். அப்போது, ரயில் நிலையத்தின் 2-ஆவது நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த விழுப்புரம் - தாம்பரம் பயணிகள் ரயிலில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தாா்.
ரயிலின் மூன்றாவது பெட்டியில் கழிப்பறைக்கு அருகில் தூக்கில் தொங்கிய முதியவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது தெரியவில்லை. விழுப்புரம் ரயில் நிலையத்தில் இரவு நிறுத்தி வைக்கப்பட்டு, மறுநாள் காலை தாம்பரம் புறப்பட்டுச் செல்லும் இந்த ரயிலில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ள காரணம் என்னவென்று தெரியவில்லை.
இதைத் தொடா்ந்து, போலீஸாா் சடலத்தை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.