முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன...
கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
திண்டிவனத்தில் நண்பா்களுடன் கிணற்றுக்கு குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டிவனம் என்.கே.நகா் உமாபதி தெருவைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் மகன் வெங்கடாசலபதி(15). 10-ஆம் வகுப்பு முடித்து விட்டு பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்தாா்.
இந்நிலையில், வெங்கடாசலபதி வியாழக்கிழமை தனது நண்பா்கள் 4 பேருடன், திண்டிவனம் பகுதியில் உள்ள கிணற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் திண்டிவனம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.