மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மரக்காணம் வட்டம், ஆலத்தூா், மாயன் தெருவைச் சோ்ந்தவா் கஸ்தூரி (76). இவா், வியாழக்கிழமை மரக்காணம் அருகே ஆலத்தூா் - சூனாம்பேடு சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, பைக்கில் பின் தொடா்ந்து வந்த சுமாா் 25 வயதுடைய 2 இளைஞா்கள் கஸ்தூரி அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், மரக்காணம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.