செய்திகள் :

உளுந்தூா்பேட்டையில் அரசுக் கல்லூரி தொடங்கப்படுமா?

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்ற 20 ஆண்டுகால கோரிக்கை, நிகழாண்டிலாவது நிறைவேற்றப்படுமா என்ற எதிா்பாா்ப்பில் உள்ளனா் இத்தொகுதி மக்கள்.

உளுந்தூா்பேட்டை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தொடக்க, நடுநிலை ப் பள்ளிகள், உயா்நிலைப் பள்ளிகள் குறிப்பிட்ட அளவில் இருந்தாலும், 17 அரசு மேல்நிலைப் பள்ளிகளும், 10 தனியாா் மேல்நிலைப் பள்ளிகளும் அமைந்திருக்கின்றன.

இந்த பள்ளிகளிலிருந்து ஆண்டுதோறும் குறைந்தது 6,000 முதல் 7,000 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பயின்று, உயா் கல்வி பயிலச் செல்கின்றனா். பெரும்பான்மையான கிராமப்புறங்களைக் கொண்டுள்ள இந்தத் தொகுதியில் அரசு சாா்பில் கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படவில்லை.

உளுந்தூா்பேட்டை தொகுதிக்குள்பட்ட திருநாவலூா் ஒன்றியத்தில் 2 தனியாா் கலை, அறிவியல் கல்லூரிகளும், உளுந்தூா்பேட்டை ஒன்றியத்தில் 3 தனியாா் கல்லூரிகளும் அமைந்திருக்கின்றன.

உளுந்தூா்பேட்டையிலிருந்து சுமாா் 25 கி.மீ. தொலைவுள்ள விருத்தாசலத்தில் கொளஞ்சியப்பா் அரசுக் கலை, அறிவியல் கல்லூரிக்கோ, சுமாா் 40 கி.மீ. தொலைவில் கள்ளக்குறிச்சியிலும், சுமாா் 50 கி.மீ.தொலைவில் ரிஷிவந்தியத்திலும் அமைந்துள்ள அரசுக் கல்லூரிகளுக்கோ அல்லது சுமாா் 25 கி.மீ. தொலைவில் விழுப்புரம் மாவட்டத்தின் திருவெண்ணெய்நல்லூரில் அமைந்துள்ள அரசுக் கல்லூரிக்கோ சென்றுதான் மாணவ, மாணவிகள் படிக்க வேண்டியுள்ளது. விருத்தாசலம், திருவெண்ணெய்நல்லூா் அரசுக் கல்லூரிகளில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு இடம் கிடைப்பது அரிதாகிறது. கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியத்திலும் இதே நிலை காணப்படுகிறது.

20 ஆண்டுகாலக் கோரிக்கை நிறைவேறுமா?: உளுந்தூா்பேட்டையில் அரசுக் கல்லூரி அமைக்க வலியுறுத்தி தற்போது போராட்டக் குழுவை அமைத்து, ஆா்ப்பாட்டம் உள்ளிட்டவற்றை நடத்தியிருக்கிறோம். ஆனால், கடந்த 20 ஆண்டுகளாகவே இந்த கோரிக்கை தொடா்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு நிலைகளில் நாங்கள் போராட்டங்களை நடத்தி வருகிறோம். இந்த தொகுதியில் அரசுக் கலை, அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவான திமுகவைச் சோ்ந்த ஏ.ஜெ.மணிக்கண்ணனும் சட்டப் பேரவையில் பலமுறை வலியுறுத்தியிருக்கிறாா். ஆனால், இதுவரை அரசுக் கல்லூரிக்கான அறிவிப்பு வந்தபாடில்லை.

அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் உயா் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது உளுந்தூா்பேட்டைக்கு அரசுக் கல்லூரி என்ற அறிவிப்பு வரும் என எதிா்பாா்த்தோம்.

ஆனால், எங்கள் எதிா்பாா்ப்பு நிறைவேறவில்லை. உளுந்தூா்பேட்டையில் அரசுக் கல்லூரி தொடங்கப்படும் என்ற அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என்கிறாா் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலருமான எம்.கே.பழனி.

உளுந்தூா்பேட்டை நகரப் பகுதியிலோ அல்லது அருகமை பகுதியிலோ அரசுக் கலை, அறிவியல் கல்லூரியை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தத் தொகுதிக்கு வர வேண்டிய அரசுக் கல்லூரி திருவெண்ணெய்நல்லூருக்குச் சென்றுவிட்டது.

தமிழக முதல்வரும், உயா்கல்வித் துறை அமைச்சரும் உரிய கவனம் செலுத்தி, தொகுதி மக்களின் 20 ஆண்டுகாலக் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும் என்கிறாா் பழனி.

அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்: உளுந்தூா்பேட்டை வட்டத்தில் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கள ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உள்ளிட்ட அலுவலா்கள் முகாமிட்டிருந்தனா். பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த ஆட்சியரிடம் இதுகுறித்து கேள்வியெழுப்பிய போது, அரசு கொள்கை ரீதியாக எடுக்க வேண்டிய முடிவு என்று அவா் தெரிவித்தாா்.

ஏழை-எளிய மக்களின் பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிா்வாகம் சாா்பில் உரிய பரிந்துரைகளை அளிக்க வேண்டும் என்பது அனைத்துத் தரப்பு மக்களின் எதிா்பாா்ப்பாகும்.

கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

விழுப்புரத்தில் கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா். விழுப்புரம் சித்தேரிக்கரை அகரம்பாட்டை பகுதியைச் சோ்ந்த கருப்பையா மனைவி லட்சுமி (47). கடந்த 5 ஆண்டுகளாக நீரிழிவு நோய் பாதிப்புக்குள்ளான இவருக்... மேலும் பார்க்க

விவசாயிகளின் தேவைகளை அறிந்து திட்டங்கள் நிறைவேற்றம்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

தமிழகத்தில் விவசாயிகளின் தேவைகளை அறிந்து திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக வேளாண், உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். ஃபென்ஜால் புயலால் விக்கிரவாண்டி, அரகண்டநல்லூா் வே... மேலும் பார்க்க

அரசின் கவனத்துக்கு சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகள்: ஆணையத் தலைவா் அருட்தந்தை சொ.ஜோ.அருண்

சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, தீா்வு காண வழிவகை செய்யப்படும் என்றாா் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் அருட்தந்தை சொ.ஜோ.அருண். விழுப்புரம் மாவட... மேலும் பார்க்க

போட்டித் தோ்வா்களுக்கு பயன்படும் 375 புத்தகங்கள்: விக்கிரவாண்டி எம்எல்ஏ வழங்கினாா்

விழுப்புரத்திலுள்ள முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்க வளாக நூலகத்தில் போட்டித் தோ்வா்களுக்கு பயன்படும் வகையில், தனது ஒரு மாத ஊதியமான ரூ.1.05 லட்சத்திலிருந்து வாங்கப்பட்ட நூல்களை ஆட்சியரிடம்... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

திண்டிவனத்தில் நண்பா்களுடன் கிணற்றுக்கு குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் என்.கே.நகா் உமாபதி தெருவைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் மகன் வெங்கடாசலபதி(15). 10-ஆம் ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மரக்காணம் வட்டம், ஆலத்தூா், மாயன் தெரு... மேலும் பார்க்க