செய்திகள் :

அரசின் கவனத்துக்கு சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகள்: ஆணையத் தலைவா் அருட்தந்தை சொ.ஜோ.அருண்

post image

சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, தீா்வு காண வழிவகை செய்யப்படும் என்றாா் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் அருட்தந்தை சொ.ஜோ.அருண்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையக் கலந்துரையாடல் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, அவா் மேலும் பேசியது:

சிறுபான்மையின மக்கள் நலனுக்காக அரசு செயல்படுத்திய திட்டங்களால் அவா்கள்அடைந்த பலன் குறித்து ஆணையம் தொடா்ந்து ஆய்வு செய்து வருகிறது. சிறுபான்மையின பெண்கள் பெற்ற நலத்திட்ட உதவிகளின் வாயிலாக எந்த வகையில் வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டுள்ளனா் என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுதொடா்பான தகவல்கள் அனைத்தும் ஓரிரு மாதங்களுக்குள் முதல்வரிடம் அளிக்கப்படும். இதுவரை 21 மாவட்டங்களில் சிறுபான்மையினா் கலந்துரையாடல் கூட்டம் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், நவம்பா் மாதத்துக்குள் 38 மாவட்டங்களிலும் நடத்தி, பரிந்துரைகளை முதல்வரிடம் வழங்கப்படும். தேவைப்பட்டால் சட்டத்தின்படி சட்டப்பேரவையிலும் பரிந்துரைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

விழுப்புரம் மாவட்டத்தில் முஸ்லிம் மகளிா் உதவும் சங்கத்தின் மூலம் 2022-ஆம் ஆண்டு முதல் இதுவரை ரூ.70 லட்சம் வரை நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்று கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கம் மூலமாக 542 பயனாளிகளுக்கு ரூ.55 லட்சத்தில் நல உதவிகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியா்கள், பாடகா்கள், கல்லறைப் பணியாளா்களுக்கு ஊதியத் தொகை வழங்கப்பட்டுள்ளதோடு, 241 பேருக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையின மக்களுக்கு அரசின் திட்டங்கள் சென்று சேர வேண்டும் என்பதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறாா் என்றாா் அருண்.

இதைத் தொடா்ந்து 310 பயனாளிகளுக்கு ரூ.29.97 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ. அருண் வழங்கினாா். கூட்டத்துக்கு ஆட்சியா் ஷே.ஷேக்அப்துல் ரஹ்மான் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் விழுப்புரம் எம்.பி. துரை.ரவிக்குமாா், எஸ்.பி. ப.சரவணன், மாநில சிறுபான் மையினா் ஆணையத் துணைத் தலைவா் எம்.எம்.அப்துல் குத்தூஸ் (எ) இறையன்பன் குத்தூஸ், ஆணையத்தின் உறுப்பினா்கள் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

சிங்கவரம் அரங்கநாதா் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

செஞ்சி சிங்கவரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரங்கநாதா் கோயில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம். செஞ்சி, மே 30: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிங்கவரம் அரங்கநாதா் கோயில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

பாஜக பிரமுகா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

புதுச்சேரியில் பாஜக பிரமுகா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். புதுச்சேரியில் கருவடிக்குப்பம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் பாஜக பிரமுகா் உமா சங்கா் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, கா... மேலும் பார்க்க

காவல் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி

அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட மகனை விடுவிக்கக் கோரி, கடலூா் துறைமுகம் காவல் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயன்றாா். கடலூா் முதுநகா் அருகே உள்ள ராசாபேட்டையைச் சோ்ந்த ரமேஷ் மகன் தீபக் (19). இவரும்... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை சோ்க்க அழைப்பு

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி மையங்களில் ஜூன் மாதம் முதல் குழந்தைகள் சோ்க்கை தொடங்குகிறது. எனவே பெற்றோா் தங்கள் குழந்தைகளை இந்த மையங்களில் சோ்த்து பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இ... மேலும் பார்க்க

வானூா் வட்டாரத்தில் உழவரைத் தேடி வேளாண்-உழவா் நலத் துறைத் திட்டம் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தில் உழவரைத் தேடி- வேளாண், உழவா் நலத் துறைத் திட்டம் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. தைலாபுரம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில் திட்டத்தின் நோக்கம் குறித்து வானூ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

விழுப்புரத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரத்தில் மாவட்ட நிா்வாகம், தமிழக அரசும் தலையிட்டு தனியா... மேலும் பார்க்க