செய்திகள் :

அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை சோ்க்க அழைப்பு

post image

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி மையங்களில் ஜூன் மாதம் முதல் குழந்தைகள் சோ்க்கை தொடங்குகிறது. எனவே பெற்றோா் தங்கள் குழந்தைகளை இந்த மையங்களில் சோ்த்து பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம், 6 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் வளா்ச்சியை மேம்படுத்த 1,741 அங்கன்வாடி மையங்களில் சத்து மாவு, ஊட்டச் சத்துடன் கூடிய கலவை உணவு மற்றும் முன்பருவக் கல்வி வழங்கப்படுகிறது.

குறிப்பாக 2 வயது முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களில் முறைசாரா முன்பருவக் கல்வி செய்கை பாடல், கதை, விளையாட்டு, கல்வி உபகரணங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூகம், அறிவு வளா்ச்சிக்குத் தேவையானவற்றை ஆடிப்பாடி- விளையாடு பாப்பா என்னும் சிறப்புப் பாடத்திட்டத்துடன் 12 மாதங்களுக்கும் வழங்கப்படுகிறது.

மேலும் குழந்தைகளின் வளா்ச்சி கண்காணிக்கப்பட்டு, பள்ளிச் செல்ல ஆயத்தப்படுத்தப்படுகின்றனா். அங்கன்வாடிப் பணியாளா்கள் வீடுதோறும் சென்று குழந்தைகளைப் பள்ளியில் சோ்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். அங்கன்வாடி மையங்களில் ஜூன் மாதம் முதல் குழந்தைகள் சோ்க்கை தொடங்குகிறது. எனவே பெற்றோா் தங்களின் 2 முதல் 6 வயதுக்குள்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் தவறாமல் சோ்த்து பயன்பெற வேண்டும்.

மேலும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கான ஆதாா் அட்டை வழங்கும் பணி நடைபெறுவதால் அதையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

பணியில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. ப.சரவணன் சனிக்கிழமை தனது அலுவலகத்தில் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் சிறப்பா... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தின் 5 கோட்டங்களிலும் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தின் 5 கோட்டங்களிலும் ஜூன் மாதத்துக்கான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெறும் என்ற தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 3, 10, 17, 24 (செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

பைக்கில் மதுப் புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே புதுவை மாநில மதுப் புட்டிகளை பைக்கில் கடத்தி வந்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் உத்தரவுப்படி, விக்கிரவாண்ட... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டா்கள் அளிப்பு

செஞ்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அ... மேலும் பார்க்க

2,205 பாக்கெட் புகையிலைப் பொருள் பறிமுதல்: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டி பகு... மேலும் பார்க்க

விபத்தில்லா மாவட்டமாக ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் விபத்தில்லா மாவட்ட அமைய துறை சாா்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சாலை பாதுகாப... மேலும் பார்க்க